Skip to main content

சின்ன மம்மி ரிட்டர்ன்ஸ்! எதிர்ப்பாரா? ஏற்றுக்கொள்வாரா? மாறிவிட்டாரா? -ஏகப்பட்ட விவாதங்கள்!

Published on 04/01/2021 | Edited on 09/01/2021
ddd

 

விடுதலை நாளினை எதிர்பார்த்திருக்கும் சசிகலாவை ஜன.01 முதல் பார்க்க தினகரன், திவாகரன் மற்றும் சொந்தபந்தங்கள் அ.தி.மு.க. அரசியல்வாதிகள் அ.ம.மு.க. பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் என ஒரு நீண்ட பட்டியலே பரப்பன அக்ராகாரம் சிறைத்துறை வசம் குவிந்திருக்கிறது.

 

ஜன 27-ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா, பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். உட்பட அ.தி.மு.க. அமைச்சர்கள், சசிகலாவின் சொந்தபந்தங்கள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்கிறார்கள். 

 

சசிகலா, பா.ஜ.க.வை எதிர்ப்பாரா? எடப்பாடியை முதல்வராக ஏற்றுக்கொள்வாரா? வரும் தேர்தலில், எடப்பாடியை அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக ஒத்துக்கொள்வாரா? சசிகலாவுக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்திடம் எப்படி நடந்துகொள்வார்? அவரை அ.தி.மு.க.வில் அனுமதிப்பார்களா… இல்லை அ.ம.மு.க.வின் நிறுவனத் தலைவராக அரசியல் நடத்துவாரா? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடுகிறது அரசியல் களம்.

 

ops

 

நம்மிடம் பேசிய மன்னார்குடி வட்டாரம், "சசிகலா இப்பொழுது நிறையவே மாறிவிட்டார். அவர் தனது சொந்தபந்தங்களை, குறிப்பாக… டி.டி.வி. தினகரனை ‘எதுவும் பேசக்கூடாது‘ என உத்தரவிட்டுள்ளார். சசிகலாவின் குடும்பம் மன்னார்குடி மாஃபியா என்கிற பட்டப்பெயரை தாங்கி நிற்பதை சசிகலா விரும்பவில்லை. சொந்தபந்தங்கள் தமிழகத்தை ஆட்சிசெய்யும் அடியாட்களாக இருப்பதை அவர் விரும்பமாட்டார்.

 

அவரைப் பொறுத்தவரை "நான் அக்காவுக்காகத் தான் அனைத்தையும் செய்தேன். நான் செய்த நல்லது, கெட்டது எல்லாம் அக்காவுக்கே (ஜெ) தெரியும். அதில் ஏற்பட்ட பழி பாவங்களுக்காக நான்கு வருடம் சிறையில் இருந்துவிட்டு வெளியே வருகிறேன். இன்று அக்கா இல்லாத சூழ்நிலையில்… நான் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் நானே பொறுப்பு. அதைக் கட்டுப்படுத்த அக்கா இருக்கமாட்டார். எனவே எனது செயல்கள் எல்லாம் அ.தி.மு.க.விற்கு நன்மை பயப்பதாக அமையும் என்பதைத் தவிர, எனக்கு தனிப்பட்ட விருப்பங்கள் எதுவுமில்லை. அக்கா உயிரைக் கொடுத்து வளர்த்த அ.தி.மு.க.வை அழியாமல் பாதுகாப்பது மட்டும்தான் எனது லட்சியம். எனக்கு துரோகம் செய்தவர்கள், முதுகில் குத்தியவர்கள் என யார்மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அதனால் எனது சொந்தபந்தங்கள் இனிமேல் அரசியலில் தலையிட நான் அனுமதிக்கமாட்டேன்" என சசிகலா சொல்வதாக அவரது சொந்தபந்தம் சொல்கிறது.

 


விடுதலையை பெரிய விழாவாக கொண்டாடும் வகையில், பெங்களூருவிலிருந்து சென்னையில் சசிகலா தங்கப் போகும் வீடு வரை பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க சொந்தபந்தங்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கொஞ்ச நாள் அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்கள். அதன்பிறகு அவர்களது ஆட்டம் மறுபடியும் ஆரம்பமாகிவிடும்'' என்கிறார்கள் சசி சொந்தங்களுக்கு நெருக்கமானவர்கள்.

 

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சசிகலாவை ஏற்றுக்கொள்வதில் பெரிய தயக்கம் நிலவுகிறது. மறுபடியும் சசிகலாவின் கைப்பிடிக்குள் அ.தி.மு.க. செல்வதை இப்போது அதிகாரத்தை அனுபவிக்கும் யாரும் விரும்பவில்லை. முதல்வர் எடப்பாடி முன்பிருந்த இரண்டாம்கட்ட தலைவர் என்கிற நிலையைத் தாண்டி முதலமைச்சர் வேட்பாளர் என்கிற முதல் இடத்தைத் தொட்டுவிட்டார். பா.ஜ.க.வுக்கு நெருக்கமான ஓ.பி.எஸ். அவரை காலைவாரிவிட எதையாவது செய்வார் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் கட்சிக்குள் இருக்கிறது.

 

இந்நிலையில் சசிகலாவை பா.ஜ.க. கையிலெடுத்துச் செயல்படு மானால், எடப்பாடிக்கு நெருக்கடி அதிகமாகும். ஒருவேளை சசிகலா மூலமாக அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. முயற்சிக்கலாம். அதன்மூலம் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படலாம். பா.ஜ.க.வின் இந்த முயற்சிக்கு ஓ.பி.எஸ். ஆதரவாகச் செயல்படலாம். பா.ஜ.க. -சசிகலா -ஓ.பி.எஸ். என  ஒரு அணி உருவாகுமேயானால்… அது எடப்பாடிக்கு சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். பா.ஜ.க.வுடன் சேர்ந்து அவர்களை வளர்த்துவிடும் வேலையை சசிகலா செய்யாமல் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொண்டால் சசிகலாவை அ.தி.மு.க.வின் கௌரவத் தலைவராக எடப்பாடி ஏற்றுக்கொள்வார். சசிகலா கௌரவத் தலைவரானாலும் கட்சியின் வேட்பாளர்களுக்கு அங்கீகாரம் தரும் கையெழுத்தைப் போடும் உரிமையை எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

 

இப்படி இரண்டு தரப்பும் விட்டுக்கொடுத்தல்களுடன் செயல்பட்டால் அ.தி.மு.க.வில் ஒற்றுமை ஏற்படும். ஆனால் சசிகலா, தனது பலத்தை மறுபடியும் நிரூபிக்க முயல்வார். அவரால் எம்.எல்.ஏ. ஆக்கப் பட்டவர்கள், கட்சி நிர்வாகிகளாக உருவானவர்கள், அமைச்சர்களாக பதவி பெற்றவர்கள்… என அனைவரையும் சசியின் சொந்தம் மிரட்டும். அந்த மிரட்டலில் பலர் சசிகலாவை சந்திக்க வருவார்கள். அந்த வருகை ஏற்படுத்தும் பலம் பா.ஜ.க., சசிகலாவுக்கு கொடுக்கும் ஆதரவு இவற்றைப் பொறுத்தே சசிகலாவின் எதிர்காலம் அமையும்.

 

ரஜினியை வைத்து அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த பா.ஜ.க., இப்போது சசிகலாவைப் பயன்படுத்த திட்டம் தீட்டிவருகிறது என்கிறது டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். இது அ.தி.மு.க.வுக்கு நிரந்தர தலைவலியாக அமையும்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

 

 


 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.