Skip to main content

எப்படி வாங்க முடியுமோ அப்படி வாங்கிக்கிறேன்... உச்சகட்ட டென்ஷனில் ஓபிஎஸ்... தடை போட்ட இபிஎஸ்! 

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

மந்திரி பதவி கேட்டு மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற அப்பா ஓ.பி.எஸ். எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இதனால் ஓ.பி.எஸ்சுக்கும் இ.பி.எஸ்.சுக்குமிடையே பனிப்போர் உச்சத்தில் இருப்பதாக அ.தி.மு.க.வில் தகவல்கள் கசிகின்றன.

 

admk



"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் வென்றது. தனது மகன் ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்க பெரும்பாடு பட்டார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அப்போதிலிருந்தே டெல்லியின் குட் புக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு ஏறுமுகம் தான். இந்த நம்பிக்கையில் தனது மகன் ரவீந்திரநாத்தை மத்திய பா.ஜ.க. அமைச்சரவையில் இணைத்துவிட வேண்டும் என காய்களை நகர்த்தினார் ஓ.பி.எஸ். அப்போது, "அமைச்சரவையில் அ.தி.மு.க.வை இணைத்துக் கொள்கிறேன். ஆனா, ஒருவருக்குத்தான் வாய்ப்பு. அது யாருக்கு என்பதை உங்கள் கட்சியில் பேசி முடிவெடுங்கள்' என தெளிவாக ஓ.பி.எஸ்.சுக்கு தகவலை பாஸ் பண்ணியிருந்தார் பிரதமர் மோடி.
 

admk



மகனுக்கு மந்திரி பதவி கேட்டு ஓ.பி.எஸ். முயற்சிப்பதை எடப்பாடி ரசிக்கவில்லை. அதேசமயம், ஒருவருக்குத்தான் வாய்ப்பு என மோடி சொல்லியிருந்ததை அறிந்து குஷியாகி விட்டார். அப்போது, மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து அ.தி.மு.க. தலைவர்களிடையே கலந்துரையாடல் நடந்தது. ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கக்கூடாது என திட்டமிட்டு ராஜ்யசபா எம்.பி. வைத்தியலிங்கத்தை கோதாவில் இறக்கினார் எடப்பாடி. அமைச்சர் பதவிக்காக வைத்தியும் கச்சை கட்ட, யாருக்கும் கிடைக்காமல் வாய்ப்பு பறிபோனது. இதனால் எடப்பாடி மீது ஓ.பி.எஸ்.சுக்கு ஏகத்துக்கும் கோபம். இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தை கடந்த 6 மாதமாக தள்ளிவைத்துள்ள பிரதமர் மோடி, தற்போது அது குறித்து ஆலோசித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அமைச்சர் பதவி கேட்டு அப்பா ஓ.பி.எஸ்.சிடம் வலியுறுத்தியுள்ளார் ரவீந்திரநாத். அதனையொட்டி, எடப்பாடியிடம் ஓ.பி.எஸ். விவாதிக்க, மீண்டும் தடைபோடுகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தினர். 
 

admk



ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான இரு தரப்பு ஆதரவாளர்களிடமும் நாம் விசாரித்தபோது, "அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய டெல்லியில் திட்டமிடப்படுகிறது என்பதை அறிந்த ரவீந்திரநாத், "இந்த முறை நான் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் கட்சியிலும் டெல்லியிலும் பேசி அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுங்கள். முடியாதுன்னா சொல்லிடுங்க. எப்படி வாங்க முடியுமோ அப்படி வாங்கிக்கிறேன்' என ஓ.பி.எஸ்.சிடம் விவாதம் செய்திருக்கிறார். அப்போது, "அப்படியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் மாதிரியெல்லாம் அரசியல் செய்ய முடியாது. கட்சிக்குன்னு சில வரையறைகள் இருக்கின்றன. உன்னை விட சீனியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும்' என மகனுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் மகனோ அதை ஏற்கவில்லை.

இந்த நிலையில், எடப்பாடியிடம் மத்திய அமைச்சர் பதவி குறித்து மகனுக்காக ஓ.பி.எஸ். விவாதிக்க, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடக்குமான்னு எனக்குத் தெரியலை. அப்படியே நடந்தாலும், சீனியர்களை தவிர்த்து விட்டு உங்க மகனுக்காக நான் எப்படி சிபாரிசு செய்ய முடியும்? அப்பா துணை முதல்வர், மகன் மத்திய அமைச்சர்னா கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடிக்கும். வேணும்னா துணை முதல்வர் பதவியிலிருந்து நீங்க விலகிக்கிங்க. அதை காரணம் காட்டி சீனியர்களிடம் பேசலாம். அவர்கள் சம்மதித்தால் எனக்குப் பிரச்சனை இல்லை' என எடப்பாடி சொல்ல, அவருடைய பேச்சு ஓ.பி.எஸ்.சை டென்சன் படுத்தியுள்ளது. கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மேலும் விவாதிப்பதை துண்டித்துக்கொண்டார்.


தனது மகனை ஓ.பி.எஸ். ஜெயிக்க வைத்ததுபோல, சேலம் மாவட்டத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். அவரால் முடியவில்லை. சொந்த மாவட்டத்திலேயே அவரது செல்வாக்கு சரிந்து கிடக்கிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ். மகன் மந்திரியானால் சேலம் உட்பட அனைத்து மாவட்ட அ.தி.மு.க.வினரும் ஓ.பி.எஸ்.சையும் அவரது மகனையும் சந்திக்கத் துவங்கி விடுவார்கள். அதன் மூலம் கட்சியில் ஓ.பி.எஸ்.சின் செல்வாக்கு வலிமையாகி விடும். அப்படி ஒரு சூழல் உருவாவது தனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறார் முதல்வர். அதற்குப் பயந்தே ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கக்கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. அதிகாரமில்லை என்றாலும் துணை முதல்வர் பதவி ஓ.பி.எஸ்.சுக்கு ஒரு கௌரவத்தை கொடுத்திருப்பதால் அதற்கு செக் வைத்தால்தான் மகனுக்கு மந்திரி பதவி கேட்க மாட்டார் என யோசித்தே கண்டிஷன் போடுகிறார் முதல்வர்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.


"மகனுக்காக வைத்த கோரிக்கையை எடப்பாடி நிராகரித்ததில் ஓ.பி.எஸ். அப்செட்டானாலும் கவலைப்படவில்லை. டெல்லியில் தனக்குள்ள தொடர்புகள் மூலம் முயற்சிகளை அவர் எடுத்து வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. அதேசமயம், மத்திய அமைச்சரவையில் மகனுக்கு வாய்ப்பு பெறுவதில் ஓ.பி. எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் பனிப்போர் உச்சத்தில் இருப்பதால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்'' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "நவம்பரில் நடக்கும் குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய நினைக்கிறார் பிரதமர் மோடி. ஆனா. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சில சிபாரிசுகளை செய்கிறது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் விரிவாக்கம் தள்ளிப்போகலாம்'' என்கின்றனர்.

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.