Skip to main content

தனியாக வசித்து வந்த நடிகை... மர்மமான முறையில் மரணம்!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் தனியாக அபார்ட்மெண்டில் வசித்து வந்த நடிகை மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

  telungu


ஆந்திராவை சேர்ந்த, பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான சாந்தி தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று வியாழக்கிழமை இறந்து கிடந்துள்ளார். ஹைதராபத்தில் எல்லா ரெட்டிகுடாவில் இன்ஜினியர் காலனி அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். 

அவருடைய வீட்டிலிருந்து சந்தேகத்திற்கு உரிய வகையில் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு அளித்த தவலின்படி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாந்தி மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்