Skip to main content

"சோகமான நாட்களில் ஒன்று" - ஜடேஜா ட்வீட்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

jadeja about worldcup 2019 semifinal loss

 

இன்றைய தேதி சோகமான நாட்களில் ஒன்றாகும் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. சுமார் 44 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து. இந்த உலகக்கோப்பை தொடரில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதியுடன் வெளியேறியது இந்தியா.

 

இந்நிலையில் இதனை நினைவுகூரும் விதமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜடேஜா, "வெற்றிபெற போராடினோம். ஆனாலும் சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டோம். சோகமான நாள்களில் ஒன்று" என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஜடேஜா 77 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.