Skip to main content

தென்னாப்ரிக்காவுடனான கடைசி டெஸ்ட்: இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

india vs south africa

 

இந்தியா - தென்னாப்ரிக்கா இடையே மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும்  இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வென்றுள்ளன. இந்தியா, இதுவரை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையில், மூன்றாவது போட்டியில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றுமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

 

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்தச்சூழலில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவதாக கடந்த டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த சிராஜூக்கு பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்படவுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதேபோல் கடந்த டெஸ்ட் போட்டியில் முதுகு பிடிப்பின் காரணமாக விளையாடாத விராட் கோலியும் அணிக்குத் திரும்பவுள்ளதாகக் கூறும் தகவல்கள், விராட் கோலி விளையாடுவதால் ஹனுமா விஹாரி ஆடும் அணியிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்