Skip to main content

சிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

சிவபெருமானுக்கு உகந்தது சிவராத்திரி. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள அனைத்து சிவாலயங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் அந்த நாளன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிவனுக்குப் பூஜை, அபிஷேகம் செய்வார்கள். தாந்த்ரீகர்கள் தங்களுக்கு பலம் அதிகமாகக் கிடைப்பதற்காக சிறப்புப் பூஜைகள் செய்வார்கள். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டி வர, அவர்களுக்கு உண்மையை  உணர்த்த அடிமுடி காணவியலாத ஜோதிரூபமாய் சிவபெருமான் காட்சிதந்த நாள் சிவராத்திரி.வடஇந்தியாவில் மகாசிவராத்திரி, சிவனின் திருமண நாளாகக் கொண்டாடப்படுகிறது.சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தால் மனிதர்களுக்கு கஷ்டங்கள், பயம் நீங்கும். தேனாபிஷேகம் செய்தால் பணக் கஷ்டம் நீங்கும். கரும்புச்சாறால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வெற்றி கிடைக்கும். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

shivan temple

வில்வ இலையை வைத்து மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறியவாறு சிவனுக்கு பூஜை செய்யவேண்டும். இதனால் நோய்கள் குணமாகும். இரவு நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டால் மனக்கஷ்டங்கள், பயம் நீங்கும்.மகாசிவராத்திரியன்று அமைதியாக அமர்ந்து, சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தைக் (நமசிவாய) கூறினால் சிவனருள் கிடைக்கும். காலை, மதியம், மாலை, நள்ளிரவு என எல்லா நேரங்களிலும் சிவனுக்குப் பூஜை செய்பவர்கள் கடந்த பிறவியின் சாபங்களிலிருந்து விடுபடுவார்கள். சிவராத்திரியன்று வில்வ இலையில் ராமருடைய பெயரை எழுதி, ஒவ்வொரு இலையாக சிவலிங்கத்தின்மீது வைத்து வழிபட்டால் அனைத்து கர்மவினைகளும் குறையும். வில்வ இலையில் "ஓம்' என்று எழுதி சிவனை வழிபட்டால் நோய்கள் குணமாகும்.கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சிவனுக்குப் பூஜை செய்தால், பின்னர் நடக்கப்போவதை முன்னரே தெரிந்துகொள்ளும் ஆற்றல் ஒருவருக்குக் கிடைக்கும். சிவனை வழிபடுபவர்கள் மகாசிவராத்திரியன்று விரதம் இருக்க வேண்டும்.

இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். கருப்புநிற ஆடை அணியக்கூடாது. வெளிர் நிறம், வெள்ளை நிறம் கொண்ட ஆடைகளை மட்டுமே அணியவேண்டும். தாமரை மலர் வைத்து சிவனை வணங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். சாமந்திப் பூவால் பூஜை செய்தால் வாக்கு சித்தி கிடைக்கும்- அதாவது அவர்கள் கூறுவது எதுவும் நடக்கும். மல்லிகைப் பூவைவைத்து வழிபட்டால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிவப்பு மலர்களால் பூஜை செய்தால் நோய் குணமாகும். எருக்கம்பூவை வைத்து சிவனை வழிபட்டால் வெற்றிகள் கிடைக்கும். விபூதியால் அபிஷேகம் செய்தால் நோய்கள் குணமாகும். உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியன்று பஸ்ம அபிஷேகம் செய்வார்கள். இதைக் காண்பவர்களுக்கு மரணபயம் நீங்கும்.மகாசிவராத்திரியன்று சிவனை எந்த இடத்திலும் வழிபடலாம். மனதாலும் வழிபடலாம். அப்படி வழிபடுவர்களுக்கு மரணம் பற்றிய பயம் சிறிதும் இருக்காது. லட்சுமியின் அருள் கிடைக்கும். வாழ்வில் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.