Skip to main content

பிரதமர் சன்னா மரின் குறித்த பொய் செய்தி... பின்லாந்து அரசு விளக்கம்...

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

உலகின் இளம் வயது பிரதமராக பதவியேற்று பலரின் கவனத்தையும் பெற்றவர் சன்னா மரின்.

 

reality about sanna marins four day work week

 

 

கடந்த மாதம் பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற சன்னா மரின், "இனி பின்லாந்து நாட்டில் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம்தான் வேலை, வாரத்துக்கு 4 நாட்கள்தான் வேலை, 3 நாட்கள் விடுமுறை" என அறிவித்ததாக தகவல்கள் பரவின. இது உலக அளவில் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என பின்லாந்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த பின்லாந்து நாடு அரசாங்கத்தின் விளக்கத்தில், "பின்லாந்து அரசாங்கத்திடம் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற எந்த திட்டமும் இல்லை. சன்னா மரின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இதுபோன்ற ஒரு சுருக்கமான யோசனையை கொடுத்தார். ஆனால் தற்போது அவர் அதனை செயல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் - பின்லாந்து, சுவீடனை எச்சரித்த ரஷ்யா!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

putin

 

ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

 

இதற்கிடையே உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு குழு அனுப்ப புதின் தயார் என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிகாரிகளை போதைப்பொருளுக்கு அடிமையான கும்பல் என்றும், நாஜிக்கள் என்றும் விமர்சித்துள்ளதோடு, நாட்டின் தலைமையை தூக்கி எறியுமாறு உக்ரைன் ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்தசூழலில் பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது. பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் சேர முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள், உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் தொடங்கியபோது, நேட்டோவில் சேரப்போவதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

நாட்டின் பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமி...

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

teenager becomes one day pm of finland

 

 

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது பதவியில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அமரவைத்தார். 

 

பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவிவகித்து வருபவர் சன்னா மரின். உலகின் மிக இளம்வயது பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது பதவியில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை ஒருநாள் பணியாற்றவைத்தார். ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்துறையில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார்.

 

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆவா முர்டோ பின்லாந்து நாட்டின் ஒருநாள் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.