Skip to main content

“விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை”- குல்பூஷன் தீர்ப்பு குறித்து இம்ரான் கான்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017- ஆம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை விதித்தது. கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக சென்ற போது மார்ச் 3 ஆம் தேதி 2016- ஆம் ஆண்டு குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு ஈரானில் கைது செய்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.  
 

imran khan

 

 

இந்திய அரசின் முறையீட்டால் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குல்பூஷண் ஜாதவ்விற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடக்கூடாது எனவும், குல்பூஷண் ஜாதவ்விற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பாக். பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை. குல்பூஷன் வழக்கில் சர்வதேச நீதிமன்ற அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். பாகிஸ்தான் அரசு இந்த விவகாரம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும்” என்றார். 


 

சார்ந்த செய்திகள்