Skip to main content

தஞ்சையில் அதிகரித்த பாதிப்பு-தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

corona rate Increased in Tanjore - Today's corona situation in Tamil Nadu!

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,631 லிருந்து அதிகரித்து  1,631 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று அதிகம். கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த ஒருநாள் தொற்று நான்காம் நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,58,623 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 170 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 174 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. தஞ்சையில் நேற்று 87ஆக இருந்த ஒரு நாள் கரோனா பாதிப்பு இன்று 117 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,146 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,399 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,517 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,80,686 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை-224, ஈரோடு-151, செங்கல்பட்டு-120, திருவள்ளூர்-58, தஞ்சை-117, நாமக்கல்-52, சேலம்-55, திருச்சி-45, திருப்பூர்-91 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்