Skip to main content

இவ்வளவு நேரமா யாருக்கிட்ட பேசுற... இடைஞ்சல் செய்த கணவருக்கு அரிவாள்மனையால் வெட்டு

Published on 26/09/2018 | Edited on 26/09/2018


 

Speaking


நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை தட்டிக் கேட்ட கணவனை அரிவாள்மனையால் வெட்டியுள்ளார் மனைவி. 
 

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் செல்வராகவன். 49 வயதாகும் இவருக்கு சுந்தரி (வயது 30) என்ற மனைவி உள்ளார். தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு செல்வராகவுன் மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, சுந்தரி யாரோ ஒரு ஆணிடம் நீண்ட நேரமாக செல்போனில் பேசியதாக தெரிகிறது.
 

இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், இவ்வளவு நேரமா யாருக்கிட்ட பேசுற... என்று மனைவியை கண்டித்தார். அப்போது கபாலிக்கும், அவரது மனைவி கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 

கணவனுடனான கடும் வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த சுந்தரி அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து கணவனின் நெற்றி மற்றும் இடது கையில் வெட்டினார்.
 

வலியால் அலறித்துடித்தார் செல்வராகவன். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

பின்னர், தனது மனைவி செல்போனில் அதிக நேரம் வேறு ஒரு ஆணுடன் பேசியதாகவும், வேலை செய்யும் இடத்தில் ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதை தட்டிக்கேட்ட தன்னை அரிவாள்மனையால் வெட்டியதாகவும் மயிலாப்பூர் காவல்நிலயைத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்