Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கான நிதி உதவி அதிகரிப்பு...

Published on 27/05/2018 | Edited on 27/05/2018
eps ops

 

 

 

தூத்துக்குடி போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும் அங்கு 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. நாளை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தூத்துக்குடிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கான நிதிஉதவியை அரசு அதிகரித்துள்ளது. அதன்படி,

லேசான காயமடைந்தவர்களுக்கு 1 இலட்சத்திலிருந்து 1.50 இலட்சமாகவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 3 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாகவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 இலட்சத்திலிருந்து 20 இலட்சமாகவும் நிவாரணத்தொகையை அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்