Skip to main content

மும்மொழிக் கொள்கை சர்ச்சை... கோவை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

KOVAI

 

கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் வேளாண் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்க விருப்பமா என விண்ணப்ப படிவத்தில் இடம்பெற்றிருந்தது சர்ச்சைகள் ஏற்படுத்திய நிலையில், இது சில விஷமிகள் செய்த போலி விண்ணப்பம் என ஷ்ரவன் குமார் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் இந்த இட மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கிருஷ்ணகிரி ஆட்சியர் பிரபாகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பழனி கோயில் நிர்வாக அதிகாரி ஜெயபால் ரெட்டி கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்