Skip to main content

சட்ட விரோதமான மணல்குவாரியை முற்றுகையிட்ட 14 பேர் சிறையிலடைப்பு!!!

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
police anchary



கரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டை உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் காவிரி ஆற்றில் அள்ளப்பட்டு வெளியிடங்களுக்கு பல்வேறு லாரிகளில் அதனை கொண்டு செல்கின்றனர். இது பற்றி அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டு, மணல் கொண்டு செல்ல உரிய அனுமதி பெறாத லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையெனில் கரூரில் காவிரித்தாயை மீட்டெடுக்க போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். அப்போது காவிரி ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட மணல் ஆய்வு அறிக்கை, இயற்கை வளம் சுரண்டப்பட்டதன் விவரம் உள்ளிட்ட சமூகஆர்வலர் முகிலன் தலைமையில் சென்ற கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் ஆவணங்களை காண்பித்தனர். 


புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மணத்தட்டை அருகே சட்டவிரோதமாக செயல்படும் மணல்குவாரியை மூடக்கோரி துறைசார் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளாததனால் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிபிரகாசு தலைமையில் மணல்குவாரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டையில் செயல்பட்டு வந்த மணல் குவாரி கடந்த வருடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கால் இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் சரவணன், அழகுமணி மற்றும் பேராசிரியர் இரவிச்சந்திரன் அடங்கிய குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வறிக்கையில், சட்டத்திற்குப் புறம்பான மணல்குவாரிகளை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மணல் குவாரி சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவது குறித்து கடந்த 09-10-2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


அதன்பிறகும் மணல்குவாரி தொடர்ந்து செயல்படுவது குறித்து குளித்தலை கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகும் எவரிடமும் சரியான விளக்கம் இல்லாததால் மணத்தட்டையில் சட்டத்திற்குப் புறம்பாக செயற்படும் மணல்குவாரி மற்றும் மணல் கிடங்கை காலையில் முற்றுகையிடும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, காவிரி பாதுகாப்பு இயக்கம், மார்க்ஸிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேர் கைது செய்து மாலை வரை அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள். எப்போது இந்த மாதிரியான போராட்டங்கள் எப்போதும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள். இந்த நிலையில் கைதானவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் இது சட்டத்திற்கு புறம்பான குவாரி இதை உடனே மூடவேண்டும் என சமூக ஆர்வலர் முகிலன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரமேசு இளஞ்செழியன், சீனிபிரகாசு, சுந்தரேசன், பாசுகரன், சரவணனன், இரமேசு, லோகேசு, குமரேசன், ஆரோக்கியசாமி, பாபு, விசய், பிரபு, மதுபால, இராசேசுவரி (காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நாம் தமிழர் கட்சியினர் 14பேர் மீது 143, 341, 353 பிரிவுகளின் வழக்கு பதிவுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 


 

 

சார்ந்த செய்திகள்