Skip to main content

நதிநீர் பங்கீடு- கேரளாவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

River water sharing - Third phase of talks with Kerala!

 

தமிழ்நாடு- கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (17/09/2021) மாலை 04.00 மணிக்கு தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

 

தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுப்பணித்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர். ஆனைமலையாறு- நல்லாறு அணைத் திட்டம், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன. 

 

அதேபோல், கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணை தொடர்பாகவும் இரு மாநில அரசின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

  

சார்ந்த செய்திகள்