Skip to main content

“எங்கள் தேவை இரக்கம் அல்ல; உரிமைகள்..” - கிரேஸ் பானு

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

“Our need is not for mercy; Rights. ”- Grace Banu

 

இனம், நிறம், பாலினம், மொழி, மதம் என எந்தவித வேறுபாடுமின்றி ஒவ்வொரு மனிதனும் மனிதனாக வாழ்வது அவசியம் என்பதை உணர்த்தவே மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. அம்மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 

 

அப்படி அதேநாளில் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியும், சமூக செயற்பாட்டுக் குழுவைத் தோற்றுவித்தவருமான கிரேஸ் பானு, மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு உரிமையைக் கேட்டுப் பல்வேறு அரசியல் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

 

மூன்றாம் பாலினத்தவரும் மற்றவர்களுக்கு சரிசமமாகப் பயணிக்க கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் இடஒதுக்கீடு அவசியமாகிறது. ஒவ்வொரு திருநங்கையும், மருத்துவம் படிப்பதாக இருந்தாலும், அரசுப் பணியில் சேர்வதாக இருந்தாலும் அவர்கள் அதனை அடைவதற்கு தனித்தனியே போராட வேண்டியதாக இருக்கிறது. எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் பாலின ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். 

 

2014ஆம் ஆண்டு நல்சா வழக்கில் உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யலாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய அரசு கிடைமட்ட இடஒதுக்கீட்டை வழங்காமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க முயற்சித்துவருகிறது. இதை முன்வைத்தே அனைத்து தலைவர்களுடனான சந்திப்பும் நிகழ்ந்துவருகிறதாம்.

 

“Our need is not for mercy; Rights. ”- Grace Banu

 

இதுகுறித்து பேசிய திருங்கை கிரேஸ்பானு, “எங்கள் தேவை பெரும்பான்மை சமூகத்தினரின் இரக்கம் அல்ல; அரசியல் அமைப்பால் உறுதி செய்யப்பட்ட உரிமைகள் மட்டுமே. இங்குள்ள அனைத்து  மாற்றுப்பாலினத்தவரும் ஓ.பி.சி. அல்ல, சாதிய ரீதியாக ஒதுக்கப்படுவதோடு சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்டுள்ளோம். மாற்று பாலினத்தவரின் பங்களிப்பையும், பாதுகாப்பையும் அனைத்து இடங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் குரலாக உள்ளது. 

 

அதன்படிதான் எங்களுக்கான போராட்டக் களத்திலும் எங்கள் மீது அக்கறையாக உள்ள தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கையை வைத்துவருகிறோம். அந்தவகையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமார், கனிமொழி, திருச்சி சிவா, தமிழச்சி தங்கப்பாண்டியன்,  காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்டவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

 

“Our need is not for mercy; Rights. ”- Grace Banu

 

அதேபோல, பி.எஸ்.பி. எம்.பி.யான ராம்ஜி கெளதம், கேரள, மஹாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில எம்.பி.கள் என மொத்தமாக 12 பேரிடம் மனு கொடுத்துள்ளோம். மேலும், ராகுல் காந்தியையும் சந்திக்கவுள்ளோம். அவர்கள் மூலமாக இக்கூட்டத்தொடரில் பேசப்பட்டு எங்களுக்கான நியதியை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையோடு இந்தக் களத்தில் பயணிக்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.