Skip to main content

ரத யாத்திரை, மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்: ரஜினிகாந்த்

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

ரத யாத்திரையில் ஆன்மீக சார்ந்த நோக்கம் இருந்தாலும்,  அது மத கலவரத்தில் போய் முடியக்கூடாது என நினைக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களாக தனது ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார்.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்.

என் ஆன்மீக பயணம் என்பது எனது ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறி இருக்கிறது. இப்பொழுது மனது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது. திரைத்துறை வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என அடிக்கடி சொல்லிவருகிறேன், பிரச்சனைகளை மிக விரைவாக முடித்து மீண்டும்  படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என வேண்டிகேட்டுக்கொள்கிறேன்.

 

rajini

 

மக்கள் மன்ற நிர்வாகிகள்  நியமனக்கூட்டம் இன்னும் முடியவில்லை.  இன்னும் பதினாறு மாவட்டங்கள் பாக்கியுள்ளது. விரைவில் அதற்கான வேலைகள் துவங்கவுள்ளேன். பெரியார் சிலை உடைக்கப்பட்டது மிகவும் கண்டிக்கப்படக்கூடிய செயல் என  நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் காட்டுமிராண்டிகள் இப்போதும் அதுவே என் கருத்து.

 

தமிழ்நாடு ஒரு மதசார்பற்ற மாநிலம் எனவே இங்கு மதக்கலவரம் வரக்கூடாது என நினைக்கிறேன் வந்தாலும் அரசாங்கம் அதுபோன்ற கலவரம் வராமல் பாதுகாக்கும் என நம்புகிறேன்.  ரத யாத்திரையில் ஆன்மீக சார்ந்த நோக்கம் இருந்தாலும்  அது  மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

 

பாரதிய ஜனதா எனக்கு பின்னாடி இருக்கிறது என்று பலர்  பரப்பிவருகிறார்கள் எனக்குப்பின்னாடி இருப்பது கடவுளும், மக்களும் தான். நான் ஏற்கனவே  டிசம்பர் 31 அன்றே சொல்லியுள்ளேன். நான் இன்னும் அரசியல் குளத்தில் இறங்கவில்லை இறங்கிய பின் கண்டிப்பாக நீந்தியாக வேண்டும். எனவே அதுவரை நடக்கும் அன்றாட விஷயங்களுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று இன்னும் எவ்வளவு முறை சொல்வதென்று எனக்கே தெரியவில்லை. 

 

ஏப்ரல் மாதம் கட்சி பெயர், கட்சிக்கொடி அறிவிக்கப்போகிறேன் என்று வெளிவந்த செய்திகள் உண்மையல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை  விரைவில் மத்திய அரசு அமைக்க வேண்டும். மாநில அரசு அதற்கான வழிவகை செய்யவேண்டும். கமல் கூறிய குற்றச்சாட்டுக்கு கருத்துக்கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்'-ம.நீ.மவில் புகைச்சல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
 'I am resigning with great regret'-M.N.M

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

அதேநேரம் அரசியல் கட்சிகளின் கூட்டணி காய் நகர்த்தலில் ஏற்படும் அதிருப்தி காரணமாக சிலர் தான் பயணித்த அரசியல் கட்சிகளிலிருந்து மற்றொரு கட்சிகளுக்கு தாவும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடும் என காத்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிலருக்கு தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியது அதிருப்தியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்காமல் திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட்டு ஒன்றை வாங்கி விட்ட நிலையில் இது கட்சிக்குள் பல்வேறு புகைச்சல்களை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை சந்திக்காமல் விலகுவது கட்சியினுடைய வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அனுஷ்கா ரவி மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளதோடு அவர் பாஜகவிலும் இணைந்துள்ளார்.

 'I am resigning with great regret'-M.N.M

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் அரசியலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Kamal Haasan made a sudden decision

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று நிபந்தனையை கமல்ஹாசன் ஏற்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

முன்னதாகவே அவர் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், செர்பியா நாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த நிலையில் மீண்டும் தனது பயணத்தை கமல்ஹாசன் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் - லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடைபெற்று வருகிறது. கமல் அல்லாத காட்சிகளை படக்குழு படமாக்கி சென்னை திரும்ப உள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் நாள் முடியும் வரை வெளிநாட்டு பயணத்தை கமல் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.