Skip to main content

இதெல்லாம் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லு! செல்லூர் ராஜூ பேட்டி!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

Sellur K. Raju


மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் ஏழை - எளிய மக்களுக்கு இலவச அரிசி, காய்கறி பலசரக்கு உள்ளிட்ட பொருள்களை முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தளபதி மாரியப்பன் சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
 


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோவில் நகரமான மதுரை மாநகரின் கோவில்கள் திறக்காததால் வாழ்வாதாரம் இழந்ததாகப் பொதுமக்கள் கூறுவதாகக் கேட்ட கேள்விக்கு, 'கோவில்களைத் திறப்பது தொடர்பான கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே கோவில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது தமிழக அரசின் எண்ணம் இல்லை. கரோனா தாக்கம் குறையும் பட்சத்தில் அதி விரைவில் கோவில்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

குடும்ப அட்டைகளை வழங்கினால் ரூபாய் ஐம்பதாயிரம் கடன் வழங்கப்படும் என்பது பற்றிய விளக்கம் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் கேட்ட கேள்விக்கு, 'வங்கிக் கிளைகளுக்குச் சென்று உரிய ஆவணங்களைச் செலுத்தினால் உரிய கடன் வழங்கப்படும்' என்றார்.
 

 


தொடர்ந்து பேசிய அவர், 'அ.தி.மு.க. சார்பாக எந்தப் போராட்டமும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வை பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இதெல்லாம் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லு. அ.தி.மு.க.வை பற்றி இல்லாத ஒன்று சொல்லி கெடுதலை உருவாக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் எண்ணமாக உள்ளது. முதலமைச்சர் மீது பற்றும் பாசமும் தமிழக மக்கள் கொண்டுள்ளனர். மற்ற மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் நம்முடைய முதல் அமைச்சர் அள்ளி அள்ளி கொடுப்பதைப் பார்த்து பொறுக்க முடியாமல் தி.மு.க.வின் தில்லுமுல்லு தான், சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்புகிறது. 

தேவை இருக்கும் பட்சத்தில் வெளியே வரவேண்டும். கட்டுப்பாடு என்பது பாதுகாப்பாக இருக்க வேண்டிதான் அரசு விதித்துள்ளது. மதுரையில் அ.தி.மு.க.வின் சார்பில் 2 லட்சம் பேருக்கு மேல் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது இன்னும் எத்தனை பேர் கேட்டாலும் நிவாரணம் தர தயாராக உள்ளோம் மதுரையில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதே எங்கள் எண்ணம்' எனத் தெரிவித்தார்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.