Skip to main content

இ-பாஸ் கூடாது- உள்துறை அமைச்சகம் கடிதம்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

 Home Ministry letter to Chief Secretaries!

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்து மற்றும் தனிநபர் செல்ல தடை விதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. உள்துறையின்  வழிகாட்டுதலை மீறும்  வகையில்  மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்து மற்றும் தனிநபர் பயணிப்பது குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார். மேலும், கரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்