Skip to main content

ஆந்திர வனத்துறையினால் கைது செய்யப்பட்ட தமிழர்கள் - மலைக்க வைக்கும் எண்ணிக்கை!

Published on 21/02/2018 | Edited on 22/02/2018

தமிழ்நாட்டில் இருந்து பிழைக்க வழியின்றி ஆந்திரப்பிரதேசம் காடுகளில் செம்மரம் வெட்டப்போய், பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர் அப்பாவி தமிழர்கள். இவர்களில் கடந்த 2015ஆம் ஆண்டு சித்தூரில் ஆந்திர வனத்துறையினர் சித்தரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களும், சில தினங்களுக்கு முன்பு கடப்பா ஏரியில் பிணங்களாக மிதந்த ஐந்து தமிழர்களும் என செம்மரம் வெட்டப்போய் எதிர்காலத்தையே தொலைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். 

 

kadappa

 

அவர்களில் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களின் படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை வெளியிட்டிருக்கிறது ஆந்திர வனத்துறை. ஆந்திர வனத்துறை வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றவர்களில் 10,664 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரை 10,558 தமிழர்களும், இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து 106 பேரும், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 80 பேரும் ஆந்திர வனத்துறை, செம்மரக்கட்டைத் தடுப்புப் படை உள்ளிட்டவற்றால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் 20 சதவீதம் பேர் திருவண்ணாமலை, சேலம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.