Skip to main content

தன் விருப்பப்படியே விசாரணை நடத்தினார் பொன்.மாணிக்கவேல்! - மேலும் 11 அதிகாரிகள் குற்றச்சாட்டு!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

 

pon manicavel

 

விசாரணை அதிகாரியை சுதந்திரமாக விசாரணை நடத்த விடாமல் தன் விருப்பப்படியே விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் பொன்.மாணிக்கவேல் உத்தரவிடுகிறார். தன் விருப்பப்படி மட்டுமே வழக்கு நடைபெற வேண்டும் என்றும் ஆதாரம் இல்லாத போது கூட கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி காராணமாக ஓராண்டு வரை மருத்துவ விடுப்பில் இருந்துள்ளோம், பொன்.மாணிக்கவேல் தலைமையில் எந்த சிலையையும் கண்டெடுக்கப்படவில்லை. பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி.ஆக இருந்த பொழுது அவர் மீது புகார் கொடுக்க முடியவில்லை. அவரை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்துள்ளதால் அவருக்கு கீழ் இனிமேலும் பணி புரிய முடியாது எனவே எங்களுக்கு வேறு ஏதாவது பணி ஒதுக்கும்படி டிஜிபி யிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்...

 

பொன்மாணிக்கவேல் மீது நேற்று 13 பேர் புகார் அளித்திருந்த நிலையில் மேலும் 11 பேர் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்