Skip to main content

அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதில்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
India's response to America's warning for chabahar port

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கூறிய நிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. 

இதனிடையே, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சபஹர் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரானும், இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் எங்களுக்குத் தெரியும். சபஹர் துறைமுகம் மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் குறித்து இந்திய அரசு தனது சொந்த வெளியுறவுக் கொள்கை இலக்குகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்போம். ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் நடைமுறையில் உள்ளன, அவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். எந்தவொரு நிறுவனமும், ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொண்டால், யாராக இருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான ஆபத்துக்கு சாத்தியம் இருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார். 

India's response to America's warning for chabahar port

இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ‘ஒய் பாரத் மேட்டர்ஸ்’ என்ற புத்தகத்தின் வங்காள் மொழி பதிப்பை கொல்கத்தாவில் இன்று (15-05-24) வெளியிட்டார். அப்போது நடந்த கலந்துரையாடலின் போது, அமெரிக்காவின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஈரானிய முடிவில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதாவது கூட்டு முயற்சி பங்குதாரர் மாற்றங்கள், நிபந்தனைகள் போன்றவை. இறுதியாக, எங்களால் இதை நீண்ட கால ஒப்பந்தத்தை செய்து கொள்ள முடிந்தது. ஒப்பந்தம் அவசியம். ஏனெனில் அது இல்லாமல், துறைமுக செயல்பாட்டை மேம்படுத்த முடியாது. அதன் செயல்பாடு, முழு பிராந்தியத்திற்கும் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்கா சொல்லப்பட்ட சில கருத்துகளை நான் பார்த்தேன். ஆனால் இது உண்மையில் அனைவரின் நலனுக்கானது என்பதை மக்கள்  புரிந்துகொள்ள வைப்பது போன்ற ஒரு கேள்வி என நினைக்கிறேன். மக்கள் இதை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. சபாஹர் மீதான அமெரிக்காவின் சொந்த அணுகுமுறையைப் பார்த்தால், சபாஹருக்கு அதிகப் முக்கியத்துவம் இருப்பதாக அமெரிக்கா நினைப்பதாகத் தெரிகிறது” என்று பதில் அளித்தார். 

India's response to America's warning for chabahar port

இரானின் தெற்கு கடற்கரையின், ஓமன் வளைகுடாவில் சபஹர் துறைமுகத்தை தற்போது இந்தியா தொடர்ந்து 10 ஆண்டுகள் நிர்வகிக்க ஒப்பந்தமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமர் மோடி இத்தாலி பயணம்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Prime Minister Modi's trip to Italy

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமர் மோடி, ஜி - 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (13.06.2024) இத்தாலி செல்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றபின் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இத்தாலியில் உள்ள அபுலியாவில் இன்று முதல் வரும் 15 ஆம் தேதி ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஜி 7 அமைப்பின் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது. இதற்காக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களுக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.

இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் பங்கேற்பு, ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடன் செல்கிறார். ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குவைத் நாட்டில் பயங்கர தீ விபத்து; அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
the news of the fire incident in Kuwait city

குவைத் நாட்டில் மங்காஃப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று (12.06.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து குவைத்தில் உள்ள இந்தியா தூதரகம் சார்பில் தெரிவிக்கையில், “இந்த தீ விபத்து தொடர்பாக, இந்திய தூதரகம் +965-65505246 என்ற அவசர உதவி எண்ணை அமைத்துள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் அனைவரையும் இந்த ஹெல்ப்லைனில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்க உறுதியுடன் உள்ளது. குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மங்காப் பகுதியில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். தேவையான நடவடிக்கை மற்றும் அவசர மருத்துவ சுகாதார பராமரிப்பு தொடர்புடைய குவைத் சட்ட அமலாக்கம், தீயணைப்பு சேவை மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

the news of the fire incident in Kuwait city

இந்நிலையில் குவைத் தீ விபத்தில் இறந்தோருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தூதர் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் இது குறித்த தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய விரும்புகிறேன். இது தொடர்பாக இந்திய தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.