Skip to main content

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மோதல்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
incident of Tirunelveli Medical College  Students

திருநெல்வேலியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுமார் 650க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அத்தோடு பயிற்சி மருத்துவர்களும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனை வளாகத்த்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்குவதற்காக மாணவர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரு குழுக்களாக பிரிந்து நேற்று (15.05.2024) மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த விடுதியின் துணை காப்பாளர் கண்ணன் பாபு என்பவர் இந்த மோதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி சமரச பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்துள்ளார். இருப்பினும் சமரசம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் கண்ணன் பாபுவின் காரின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. 

incident of Tirunelveli Medical College  Students

இதனையடுத்து இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட மாணவர்கள் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் முன்பு விசாரணை ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் மோதல் சம்பவம் குறித்த விளக்க கடிதம் பெறப்பட்டது. அதன் பின்னர் மேலும் மருத்துவ கல்லூரி இயக்குநரின் அறிவுரையின் படி இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மாணவர்கள் மோதல் தொடர்பாக காவல்துறைக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடல் அடக்கம்!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
tirunelveli deepak raja last journey

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் பரபரப்பு காட்சிகள் பதிவாகி இருந்தன. 

tirunelveli deepak raja last journey

இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை விசாரிக்கத் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் தீபக் ராஜாவின் உடலை வாங்க மறுத்து தீபக் ராஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தீபக் ராஜாவின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 7 நாட்களுக்குப் பிறகு தீபக் ராஜாவின் உடல் அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தீபக் ராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான வாகைகுளத்தில் இன்று (27.05.2024) அடக்கம் செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்திற்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் சுமார் 2 ஆயிரம் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தின் போது மட்டும் சுமார் 500 போலீசார் உடன் சென்றனர். தீபக் ராஜாவின் உடலுடன் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்கள் வைத்து அடக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

நெல்லை இளைஞர் கொலை; 4 பேர் கைது!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
tirunelveli deepak raja incident police arrested 4 people

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 

tirunelveli deepak raja incident police arrested 4 people

இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை விசாரிக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும் கொலை வழக்குடன் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த பிறகே தீபக் ராஜ் உடலை வாங்குவோம் எனக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இத்தகைய சூழலில் தான் தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் தனிப்படை போலீசாரிடம் சரண் அடைந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் போலீஸாரிடம் சரணடைந்த 5 பேரை பாளையங்கோட்டை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த முத்து சரவணன், ஐயப்பன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பன, ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். 

tirunelveli deepak raja incident police arrested 4 people

போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இக்கொலைக்கான காரணம் குறித்துத் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரையும் போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.