Skip to main content

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
14 Sri Lankan fishermen arrested
மாதிரிப்படம்

இந்தியக் கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே உள்ள இந்தியக் கடல் பகுதியில் கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடலோர காவல் படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்