ADVERTISEMENT
கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், படப்பிடிப்பு காரணமாகவும் இளையராஜா, ரஜினி, உள்ளிட்ட பலர் நேரில் வரமுடியாமல் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தனர்.
ADVERTISEMENT
அந்த வகையில் அறிமுக இயக்குனர் தீபக் சுந்தரராஜன் இயக்கும் படத்தில் டாப்ஸி, விஜய் சேதுபதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்துவரும் நிலையில், எஸ்.பி.பி-யின் மறைவிற்குப் படப்பிடிப்பு தளத்திலேயே விஜய் சேதுபதி உள்ளிட்ட படக் குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.
Show comments