ADVERTISEMENT
ADVERTISEMENT
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளதால் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் நேரம், காலம் பார்க்காமல் பணி செய்துகொண்டிருப்பதற்கு பலரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள 'D1' காவல் நிலையத்திற்குச் சென்று அங்குள்ள காவலர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு அவர்களிடம் ஆட்டோகிராஃப்பும் வாங்கினார்.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT