"பாலகிருஷ்ணன் சடலத்தை உடனடியாக கோவை அரசு மருத்துவ மனைக்கு மாற்றவேண்டும். அங்கு டீன் தலைமையில் டாக்டர்கள் கொண்ட குழு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும். அவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் பிரேத விசாரணை மேற்கொள்ளவேண்டும். பாலகிருஷ் ணன் கைது செய்யப்பட்டது முதல் அனைத்து சி.சி.டி.வி. புட்டேஜ்களும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்'' என 08-01-2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பெழுத, ஈரோட்டில் நடந்த காவல் சந்தேக மரணம் வெளிச்சத்திற்கு வந்தது.
"தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அகரம்தான் எங்களது சொந்த ஊர். கிறிஸ்துமஸுக்கு மறுநாள் இங்கே இருந்து ஸ்கார்பியோ கார் ஒன்றில் வேலைக்காக ஈரோட்டிற்கு புறப்பட்டுச் சென்றான் தம்பி பாலகிருஷ்ணன். ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த 02-01-2024 அன்று அவனுடைய வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் போன்செய்து, "உன் தம்பியை அடித்துக் கொன்றுவிட்டார்களாம். பாடி பெருந் துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் இருக்கிறதாம்' என தகவல் கூறினார்.
நான் என் சொந்தக்காரர்களையெல்லாம் அழைச்சிக்கிட்டு அங்கே போனேன். அங்கே பாலகிருஷ்ணனின் சடலத்தைப் பார்க்கையில் முதுகில் லத்தியால் அடித்த கொடூர காயமும், இடது கன்னத்தில் கன்றிய காயமும், வலது அக்குளில் துளை போன்ற காயமும், வலது கையில் சிராய்ப்புக் காயமும், கால் பாதத்தில் லத்தியால் தாக்கிய காயமும் இருந்தது. அதுபோக, ஆணுறுப்பு வீங்கி விந்துவும், இரத்தமும் வெளியேறிய நிலையில் இருந்தது. அவன் உடுத்தியிருந்த கைலியிலும் அதன் கறை காணப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தில் கேட்டபொழுது எ
"பாலகிருஷ்ணன் சடலத்தை உடனடியாக கோவை அரசு மருத்துவ மனைக்கு மாற்றவேண்டும். அங்கு டீன் தலைமையில் டாக்டர்கள் கொண்ட குழு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும். அவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் பிரேத விசாரணை மேற்கொள்ளவேண்டும். பாலகிருஷ் ணன் கைது செய்யப்பட்டது முதல் அனைத்து சி.சி.டி.வி. புட்டேஜ்களும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்'' என 08-01-2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பெழுத, ஈரோட்டில் நடந்த காவல் சந்தேக மரணம் வெளிச்சத்திற்கு வந்தது.
"தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அகரம்தான் எங்களது சொந்த ஊர். கிறிஸ்துமஸுக்கு மறுநாள் இங்கே இருந்து ஸ்கார்பியோ கார் ஒன்றில் வேலைக்காக ஈரோட்டிற்கு புறப்பட்டுச் சென்றான் தம்பி பாலகிருஷ்ணன். ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த 02-01-2024 அன்று அவனுடைய வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் போன்செய்து, "உன் தம்பியை அடித்துக் கொன்றுவிட்டார்களாம். பாடி பெருந் துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் இருக்கிறதாம்' என தகவல் கூறினார்.
நான் என் சொந்தக்காரர்களையெல்லாம் அழைச்சிக்கிட்டு அங்கே போனேன். அங்கே பாலகிருஷ்ணனின் சடலத்தைப் பார்க்கையில் முதுகில் லத்தியால் அடித்த கொடூர காயமும், இடது கன்னத்தில் கன்றிய காயமும், வலது அக்குளில் துளை போன்ற காயமும், வலது கையில் சிராய்ப்புக் காயமும், கால் பாதத்தில் லத்தியால் தாக்கிய காயமும் இருந்தது. அதுபோக, ஆணுறுப்பு வீங்கி விந்துவும், இரத்தமும் வெளியேறிய நிலையில் இருந்தது. அவன் உடுத்தியிருந்த கைலியிலும் அதன் கறை காணப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தில் கேட்டபொழுது எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அவனது நண்பர்களிடம் விசாரித்த பொழுதுதான் போலீஸார் அழைத்துச்சென்று சித்ரவதை செய்து கொன்றது தெரியவந்தது'' என்றார் இறந்த பாலகிருஷ்ணனின் அண்ணன் மாரியப்பன்.
சென்னிமலை காவல் நிலைய க்ரைம் எண் 8/2024-ன் படி (05/01/2024)பதிவு செய்த முதல் தகவலறிக்கையின் படி காவல் சந்தேக மரணம் பதிவுசெய்து, சட்டமுரணான காவலில் வைத்து பாலகிருஷ்ணனை அடித்துக் கொலைசெய்துள்ள னர் ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஸ்பெஷல் டீமும், பெருந்துறை க்ரைம் டீம் போலீஸாரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை வழக்கறிஞரான பாலசுப்பிரமணிய னோ, "இறந்த பாலகிருஷ்ணனை சில வருடங்களாக எனக்குத் தெரியும், கிறிஸ்துமஸுக்கு மறுநாள் என்னை நெல்லை நீதிமன்றத்தில் சந்தித்துவிட்டு தான் ஈரோட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றார். தீபாவளிக்கு முந்தைய காலத்தில் பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நான்தான் அந்த வழக்கில் ஆஜராகி வெளியில் கொண்டுவந்தேன்.
அந்த வழக்கின்போது பெருமாள்புர போலீஸார் இவரது அடையாள அட்டைகள் கொண்ட பர்ஸைக் கைப்பற்றி வைத்திருந்தது. அதனை வாங்கி 26-ஆம் தேதி இவனிடம் கொடுத்தேன். அதற்காகதான் நெல்லை நீதிமன்றத்திற்கு வந்தான். அவனுடன் பேரூரைச் சேர்ந்த சுரேஷும் இருந்தான். இங்கேயிருந்து சென்றவர்கள் நாமக்கல்லில் ஜோதிகண்ணனை சேர்த்துக்கொண்டு ஈரோடு பேருந்து நிலையம் அருகிலுள்ள லாட்ஜில் ஜோதிகண்ணன் எனும் பெயரில் அறையெடுத்துத் தங்கியுள்ளனர். இவர்களுடன் பிரகாஷ், பாரதி, பிரசாந்த் உள்ளிட்டவர்கள் இணைந்த நிலையில் மொத்தமாக எட்டு பேரும் சேர்ந்து பெருந்துறை சாலை பழையபாளையம் அருகிலுள்ள பாரில் சரக்கடிக்க ஆஜராகியுள்ளனர்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணனிற்கு அலைபேசியில் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்திருக்கின்றது. பாரினுள் உள்ளே செல்வதும், வெளியில் வருவதுமாக இருந்துள் ளான். அப்போது யூனிபார்மில் இல்லாத 13 போலீஸார் உள்ளே நுழைந்து பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 6 நபர்களை தூக்கிக்கொண்டு டெம்போவில் வைத்து கிளம்பியிருக்கின்றது. மீதி இருவரும் வெளியில் இருந்ததால் தப்பியுள்ளனர். அதில் ஒருவன் பேரூர் சுரேஷ், வெளியில் வந்து என்னிடம் கூற, முந்தைய வழக்குகளுக்காக பிடித்துச்சென்றிருக்கலாம் என நினைத்து, சரி விசாரிக்கின்றேன் என்றேன். இந்த நிலையில் மறுநாளும் போன் அடித்து, பாலகிருஷ்ணனையும், பிரகாஷையும் மட்டும் தங்கள் கஸ்டடியில் வைத்துக்கொண்டு ஏனைய 4 நபர்களை விடுவித்துள்ளது போலீஸ் என்றான். அதன்பின் 2-ஆம் தேதியன்றுதான் பாலகிருஷ்ணன் இறந் துள்ளான் என சென்னிமலை போலீஸாரிடமிருந்து தகவல் வந்தது'' என்கிறார் அவர்.
ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹரின் ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ. செந்தில்குமார், எஸ்.எஸ்.ஐ. ராதாகிருஷ்ணன், சித்தோடு எஸ்.ஐ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட போலீஸாரோடு மொத்தம் 16 போலீஸார் இறந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 6 நபர்களை விசாரணைக்காக அழைத் துச் சென்றவர்கள் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அறுவரும் பெருந்துறையிலுள்ள மனீஸ் லாட்ஜில் தங்கவைத்து விசாரிக்கப் பட்டுள்ளனர். ஆறு நபர்களில் 4 நபர்கள் கழட்டிவிடப்பட்ட நிலையில் பிரகாஷ் மட்டும் பாலகிருஷ்ணனுடன் தங்கவைக்கப்பட்டுள்ளான். பாலகிருஷ்ணன் மயங்கிய நிலையில் அருள்மோகன் கிளினிக் எனும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் நினைவு திரும்பாததால் 29-12-2023 பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான். சேர்த்தது உடனிருந்த பிரகாஷ்.
"கொத்தாக ஆறுபேரை தூக்கிட்டு வந்து மனீஸ் லாட்ஜில் வைச்சு விசாரிச்சாங்க. திருட்டுக் கேஸாத்தான் இருக்குமென நினைக்கின்றேன். போலீஸ் கேட்பதே எனக்கு விளங்கவில்லை. 4 பேரை அனுப்பிய நிலையில் பாலகிருஷ்ணனை அடி உரிச்சுட்டாங்க! வலியால் கத்தினால் டிவியை ஆன் செய்து சவுண்ட் வைச்சுட்டாங்க. வெளியில் எதுவும், யாருக்கும் கேட்காத நிலை. அடிதாங் காமல் பாலகிருஷ்ணன் மயங்கிவிட்டான். அவன் மயங்கி இருப்பதுபோல் நடிக்கிறான் என நினைத்து மிளகாய்ப் பொடியை மூக்கிலும், ஆசனவாயிலும் வைச்சு அடிச்சாங்க. ஒரேயடியா கோமா நிலைக்குப் போய்ட்டான். உடனே என்னை மிரட்டி ஆஸ்பத்திரியில் சேர்க்க வைச்சாங்க'' என மற்ற நண்பர்களிடம் கூறியிருக்கின்றான் பாலகிருஷ்ணனுடன் உதை வாங்கிய பிரகாஷ்.
பாலகிருஷ்ணன் முதலில் கல்லீரல் வீங்கி செத்துவிட்டான் என்றும், பிறகு தற்கொலை செய்துவிட்டான் என்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றது சென்னிமலை போலீஸ். அதுதான் முதல் சந்தேகமாகியுள்ளது உறவினர்களுக்கு!
வழக்கறிஞர் மகராஜனோ, "பிரேதத்தை வைத்திருந்த பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ மனை சென்ற நிலையில்தான் தெரிந்தது. பாலகிருஷ்ணனின் உடலெங்கும் எட்டுக் காயங்கள் இருந்தன. கொடூரமான காயங்கள் அவை. காயத்துடன் இங்கு சேர்த்தார்களா..? என மருத் துவமனை நிர்வாகத்திடம் கேட்டால், அங்குள்ள ஏ.ஆர். பதிவேட்டில் காயம் இல்லை என எழுதி வைத்துள்ளார்கள். சட்ட விரோத காவலில் பால கிருஷ்ணன் கொலைசெய் யப்பட்டது குறித்து புகாரளிக்க சென்னிமலை காவல் நிலையத்திற்கு சென்றோம். போலீ ஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு எங்களிடம் சமாதானம் பேசுவதி லேயே இருந்தனர். வேறுவழியில்லாமல் புகாரை ஸ்பீடு போஸ்ட் செய்தோம். 05-ஆம் தேதி காவல் சந்தேக மரணம் என எப்.ஐ.ஆர். போட்டது. எனினும் எப்படியாவது பிரேதப் பரிசோதனை செய்து பிரேதத்தை எங்களிடம் கொடுத்துவிடலாம் என முயற்சியெடுத்தது ஈரோடு மாவட்ட காவல்துறை. சேர்ப்பிக்கும்போது காயமே இல்லை என எழுதிய மருத்துவமனை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் சென்னை உயர்நீதி மன்றத்தை நாடினோம். இந்த சட்டவிரோத காவல் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கை'' என்கிறார் அவர்.
08/01/2024 சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஈரோடு விரைவு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 முனிக்குமாரின் மேற் பார்வையில், 09/01/2024 அன்று கோவை அரசு மருத்துவ மனையில் மதியம் 2-லிருந்து 4.30 மணி வரை பிரேதப் பரிசோதனை நடந்தது. முன்பாக இன்கொஸ்ட்போது (உடல் காயங்கள் கூராய்வு) 8 காயங்கள் இருந்ததை ஊர்ஜிதப்படுத் திய நீதிபதி மாரியப்பன், வழக்கறிஞர் மகராஜன் உள்ளிட்ட 9 சாட்சிகளை விசாரித்தது குறிப்பிடத் தக்கது. அதன்பின் இரவு 7.50 மணியளவில் பிரேதத்தை வாங்கி உறவினர்கள் பாலகிருஷ்ண னின் சொந்த ஊரான அகரத்தில் அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து கருத்தறிய ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹரை தொடர்புகொண் டோம். அழைப்பினை ஏற்கவில்லை. இருப்பினும் வாட்ஸ்ஆப்பில் கருத்தினைக் கேட்டுள்ளோம். அதற்கும் பதிலளிக்கவில்லை.
இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான காவல் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. நீதிமன்றம் எதற்கு? காவல்துறையே போதுமென நினைக்கிறார்களா காவல்துறையினர்?
படங்கள்: விவேக்