Skip to main content

அடிக்கடி என்னுடைய போட்டோவை கேட்பார்... போலீஸ் மீது இளம்பெண் கூறிய அதிர்ச்சி புகார்!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணுக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா வில்லன் பாணியில் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ, இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

விசாரணையில் இறங்கினோம். நாகை மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக இருப்பவர் விவேக் ரவிராஜ். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஊரான ஓரடியாம்பல்லத்தைச் சேர்ந்த அவர் 2017-ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு காவல் நிலையத்தில்தான் முதன்முதலில் உதவி ஆய்வாளராகச் சேர்ந்தார். அப்போது சுபஸ்ரீ என்கிற இளம்பெண், அவருக்கு முகநூல் மூலம் நட்பாக, அடுத்தடுத்து எல்லாம் நடக்க ஆரம்பித்தது. இந்த நிலையில்தான்... அந்த சுபஸ்ரீக்கு விவேக் ரவிராஜ், கடுமையாக மிரட்டல் விடும் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

incident



இது குறித்து விபரம் அறிய அந்த சுபஸ்ரீயைத் தேடிப்பிடித்தோம். அப்போது அவர்...

"விவேக்கோடு முகநூல் நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகப் பழகினோம். பிறகு என்னுடைய செல்நம்பர் கேட்டார். அதன்பிறகு வீடியோக்களில் பேசிக்கொண்டிருதோம்; அடிக்கடி என்னுடைய போட்டோவை கேட்பார், அவரோட போட்டோக்களை விதவிதமா அனுப்புவார். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசிக் கொண்டோம். எங்களின் முதல் சந்திப்பு வைத்தீஸ்வரன் கோயில்லதான் நடந்தது. இதற்கிடையே அவரை வேட்டைக்காரனிருப்புக்கு மாற்றினாங்க. அப்போ என்னை வரச்சொன்னார். அவருக்கு வாட்ச் வாங்கிகொண்டு இரவு 8 மணியிருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் வந்து போன் போட்டேன். இரவு 11 மணிக்கு வந்தார். இரவு 12 மணிக்கு மணல்மேடு கல்லூரிக்கு எதிர்ப்புறம் உள்ள அவரது வாடகை வீட்டிற்கு கூட்டிட்டு போனார். அன்று என்னிடம் எல்லைமீறி நடந்து கொண்டார். திரு மணம் செய்துகொள்வதாகக் கூறியதால் உடன்பட்டேன்.

இதனால் கர்ப்பமானேன். இது தெரிஞ்சதும், "வீட்டிலோ, வேறு யாரிடமும் இதைச் சொல்லவேண்டாம். வெளியில் தெரிந்தால் போலீஸ் வட்டாரத்தில் எனக்கு பெருத்த அவமானம் உண்டாகும். இப்போதைக்கு கருக்கலைப்பு செய்து கொள். ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துக்கலாம்'னு கெஞ்சியதோடு, அவருடைய நண்பர் ஹரிஹரன் என்பவர் சென்னையில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். நான் கருக்கலைப்புக்கு உடன்படவில்லை. "பெற்றோருடன் வந்து எங்க வீட்டுல பேசுங்க'ன்னு சொன்னேன். பிறகு தன் தாயாருடன் ஒருநாள் இரவு 9 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் பேசினார். "மூன்று மாதத்தில் திருமணம் செய்கிறேன்' என்று கருக்கலைப்புக்கு சம்மதிக்க வைத்தார். காரியம் முடிந்ததும் என்னிடம் பேசுவதையே நிறுத்தியதோடு, என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் முகத்தில் அடித்தது போல் பேசத்துவங்கி விட்டார். "இனி நீ கால்செய்து பேசினால், உன் ஊரில் நீ தவறானவள் என்று போஸ்டர் ஒட்ட வைத்துவிடுவேன்' என்று மிரட்டினார்.


வேட்டைக்காரனிருப்பில் இருந்து தஞ்சை மாவட்டம் மதுக்கூருக்கு மாறிப் போனார், அங்கேயும் தேடிப்போனேன். அங்க அவரோட அம்மா முன்பாகவே என்னை அடித்ததோடு ஆபாசமாகத் திட்டினார். அதனால் நீதிகேட்டு அன்று தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் படி ஏற ஆரம்பிச்ச நான், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., மயிலாடுதுறை டி.எஸ்.பி. அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், நாகை எஸ்.பி., ஏடி.எஸ்.பி. என ஏறாத காவல்துறை அலுவலகமே இல்லை; கொடுக்காத ஆதாரங் களே இல்லை. ஆனாலும் காவல்துறையில் நடவடிக்கை இல்லை'' என்று தேம்பியவர்...

மீண்டும் தொடர்ந்தார்...

"ஒருமுறை நாகை முன்னாள் எஸ்.பி.விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலை யத்தை விசாரிக்கச் சொன்னார். அங்க நான் போயிருந்தேன். விவேக் வரல, நான்கு நாள் கழித்து சென்னை வந்தவர், "கேசை வாபஸ் வாங்கு; இல்லன்னா எத்தனை தலை விழும்னு தெரியாது. என்னோட போலீஸ் புத்திய காட்டவேண்டி வரும்'னார். அதுக்கும் நான் பயப்படல. பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தூண்டுதலின் பேரில் மயிலாடுதுறையை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் வந்து என்னிடம் பேரம் பேசினாங்க. நான் மறுத்துட்டேன். அவர் முகத்திரையக் கிழிக்கணும்னு தான் உங்ககிட்ட பேசுறேன்'' என முழுக்கதையையும் சொல்லி முடித்தார்.

எஸ்.ஐ. விவேக் ரவி ராஜை சந்திக்க, திட்டச் சேரி காவல் நிலையத்திற்கு சென்றோம். அவர் வெளியில் சென்றிருப்பதாகக் கூறி செல் போன் நம்பரை கொடுத்தனர். அதில் அழைத்தோம். அவர் எடுக்கவில்லை.


காவல்துறை வட்டாரத் தில் விசாரித்தபோது, "வேலையில் சேர்ந்த புதுசுல ஸ்பீடா இருந்தார். யார் கேட்டாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெயரைச் சொல்லி மிரட்டுவார். ஒருமுறை பட்டவர்த்தி அருகே உள்ள சாராய வியாபாரி ஒருவனை கைது செய்து சிறைக்கு அனுப்பிட்டு அவ னோட பொண்டாட்டிக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து அங்க நைட் டூட்டியிலேயே போனார். அக்கம் பக்கத்தினர் விரட்டி அடிச்சிருக்காங்க. அதே மாதிரி மணல் கொள்ளையர் களிடம் தனி நெட்வொர்க்கே வைத்துக்கொண்டு அமைச்சர் பெயரைச் சொல்லி சம்பாதிச் சார். அந்த விவகாரத்தில் ஒரு கொலை நடந்தது. அதில்தான் மாற்றலானார்; சப்-இன்ஸ்பெக் டர் விவேக்கும், சுபஸ்ரீயும் வன்னியர் சமூகம்தான். அந்தப் பொண்ணோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கர்ப்பமாக்கியது தப்புதானே?'' என்கிறார்கள். இந்த விவகாரத்தில் உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுத்துக் காவல்துறையின் மாண்பை நிலைநாட்ட வேண்டும்.


 

 

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.