Skip to main content

அடிக்கடி என்னுடைய போட்டோவை கேட்பார்... போலீஸ் மீது இளம்பெண் கூறிய அதிர்ச்சி புகார்!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணுக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா வில்லன் பாணியில் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ, இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

விசாரணையில் இறங்கினோம். நாகை மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக இருப்பவர் விவேக் ரவிராஜ். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஊரான ஓரடியாம்பல்லத்தைச் சேர்ந்த அவர் 2017-ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு காவல் நிலையத்தில்தான் முதன்முதலில் உதவி ஆய்வாளராகச் சேர்ந்தார். அப்போது சுபஸ்ரீ என்கிற இளம்பெண், அவருக்கு முகநூல் மூலம் நட்பாக, அடுத்தடுத்து எல்லாம் நடக்க ஆரம்பித்தது. இந்த நிலையில்தான்... அந்த சுபஸ்ரீக்கு விவேக் ரவிராஜ், கடுமையாக மிரட்டல் விடும் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

incident



இது குறித்து விபரம் அறிய அந்த சுபஸ்ரீயைத் தேடிப்பிடித்தோம். அப்போது அவர்...

"விவேக்கோடு முகநூல் நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகப் பழகினோம். பிறகு என்னுடைய செல்நம்பர் கேட்டார். அதன்பிறகு வீடியோக்களில் பேசிக்கொண்டிருதோம்; அடிக்கடி என்னுடைய போட்டோவை கேட்பார், அவரோட போட்டோக்களை விதவிதமா அனுப்புவார். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசிக் கொண்டோம். எங்களின் முதல் சந்திப்பு வைத்தீஸ்வரன் கோயில்லதான் நடந்தது. இதற்கிடையே அவரை வேட்டைக்காரனிருப்புக்கு மாற்றினாங்க. அப்போ என்னை வரச்சொன்னார். அவருக்கு வாட்ச் வாங்கிகொண்டு இரவு 8 மணியிருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் வந்து போன் போட்டேன். இரவு 11 மணிக்கு வந்தார். இரவு 12 மணிக்கு மணல்மேடு கல்லூரிக்கு எதிர்ப்புறம் உள்ள அவரது வாடகை வீட்டிற்கு கூட்டிட்டு போனார். அன்று என்னிடம் எல்லைமீறி நடந்து கொண்டார். திரு மணம் செய்துகொள்வதாகக் கூறியதால் உடன்பட்டேன்.

இதனால் கர்ப்பமானேன். இது தெரிஞ்சதும், "வீட்டிலோ, வேறு யாரிடமும் இதைச் சொல்லவேண்டாம். வெளியில் தெரிந்தால் போலீஸ் வட்டாரத்தில் எனக்கு பெருத்த அவமானம் உண்டாகும். இப்போதைக்கு கருக்கலைப்பு செய்து கொள். ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துக்கலாம்'னு கெஞ்சியதோடு, அவருடைய நண்பர் ஹரிஹரன் என்பவர் சென்னையில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். நான் கருக்கலைப்புக்கு உடன்படவில்லை. "பெற்றோருடன் வந்து எங்க வீட்டுல பேசுங்க'ன்னு சொன்னேன். பிறகு தன் தாயாருடன் ஒருநாள் இரவு 9 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் பேசினார். "மூன்று மாதத்தில் திருமணம் செய்கிறேன்' என்று கருக்கலைப்புக்கு சம்மதிக்க வைத்தார். காரியம் முடிந்ததும் என்னிடம் பேசுவதையே நிறுத்தியதோடு, என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் முகத்தில் அடித்தது போல் பேசத்துவங்கி விட்டார். "இனி நீ கால்செய்து பேசினால், உன் ஊரில் நீ தவறானவள் என்று போஸ்டர் ஒட்ட வைத்துவிடுவேன்' என்று மிரட்டினார்.


வேட்டைக்காரனிருப்பில் இருந்து தஞ்சை மாவட்டம் மதுக்கூருக்கு மாறிப் போனார், அங்கேயும் தேடிப்போனேன். அங்க அவரோட அம்மா முன்பாகவே என்னை அடித்ததோடு ஆபாசமாகத் திட்டினார். அதனால் நீதிகேட்டு அன்று தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் படி ஏற ஆரம்பிச்ச நான், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., மயிலாடுதுறை டி.எஸ்.பி. அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், நாகை எஸ்.பி., ஏடி.எஸ்.பி. என ஏறாத காவல்துறை அலுவலகமே இல்லை; கொடுக்காத ஆதாரங் களே இல்லை. ஆனாலும் காவல்துறையில் நடவடிக்கை இல்லை'' என்று தேம்பியவர்...

மீண்டும் தொடர்ந்தார்...

"ஒருமுறை நாகை முன்னாள் எஸ்.பி.விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலை யத்தை விசாரிக்கச் சொன்னார். அங்க நான் போயிருந்தேன். விவேக் வரல, நான்கு நாள் கழித்து சென்னை வந்தவர், "கேசை வாபஸ் வாங்கு; இல்லன்னா எத்தனை தலை விழும்னு தெரியாது. என்னோட போலீஸ் புத்திய காட்டவேண்டி வரும்'னார். அதுக்கும் நான் பயப்படல. பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தூண்டுதலின் பேரில் மயிலாடுதுறையை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் வந்து என்னிடம் பேரம் பேசினாங்க. நான் மறுத்துட்டேன். அவர் முகத்திரையக் கிழிக்கணும்னு தான் உங்ககிட்ட பேசுறேன்'' என முழுக்கதையையும் சொல்லி முடித்தார்.

எஸ்.ஐ. விவேக் ரவி ராஜை சந்திக்க, திட்டச் சேரி காவல் நிலையத்திற்கு சென்றோம். அவர் வெளியில் சென்றிருப்பதாகக் கூறி செல் போன் நம்பரை கொடுத்தனர். அதில் அழைத்தோம். அவர் எடுக்கவில்லை.


காவல்துறை வட்டாரத் தில் விசாரித்தபோது, "வேலையில் சேர்ந்த புதுசுல ஸ்பீடா இருந்தார். யார் கேட்டாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெயரைச் சொல்லி மிரட்டுவார். ஒருமுறை பட்டவர்த்தி அருகே உள்ள சாராய வியாபாரி ஒருவனை கைது செய்து சிறைக்கு அனுப்பிட்டு அவ னோட பொண்டாட்டிக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து அங்க நைட் டூட்டியிலேயே போனார். அக்கம் பக்கத்தினர் விரட்டி அடிச்சிருக்காங்க. அதே மாதிரி மணல் கொள்ளையர் களிடம் தனி நெட்வொர்க்கே வைத்துக்கொண்டு அமைச்சர் பெயரைச் சொல்லி சம்பாதிச் சார். அந்த விவகாரத்தில் ஒரு கொலை நடந்தது. அதில்தான் மாற்றலானார்; சப்-இன்ஸ்பெக் டர் விவேக்கும், சுபஸ்ரீயும் வன்னியர் சமூகம்தான். அந்தப் பொண்ணோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கர்ப்பமாக்கியது தப்புதானே?'' என்கிறார்கள். இந்த விவகாரத்தில் உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுத்துக் காவல்துறையின் மாண்பை நிலைநாட்ட வேண்டும்.


 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.