Skip to main content

சசிகலாவை காப்பாற்றும் எடியூரப்பா...செம்ம கடுப்பில் மோடி...ரெய்டில் எஸ்கேப் ஆன சசிகலா!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். அந்த சிறையை பெங்களூரு போலீசார் திடீர் என சோதனை நடத்தினர். அக்டோபர் 9-ம் தேதி அதிகாலை முதல் நான்கு மணி நேரம் நடைபெற்ற அந்த ரெய்டு பற்றிய செய்தி வெளியானதும் சசிகலா சொந்தங்கள் பரபரப் படைந்தன. சிறைக்குப் போன நாளில் இருந்து சிறிது காலம் முன்பு வரை புகழேந்திதான் சசிகலாவிற்கு தேவையானவற்றை செய்து வந்தார். அதற்காக சிறை வளாகத்திலும், சிறைக்கு பக்கத்தில் சசிகலாவுக்கு தேவையானவற்றைக் கொண்டு வருவதற்காக வாங்கப்பட்ட அப்பார்ட் மெண்ட்களிலும், "எலக்ட்ரானிக் சிட்டி' எனப்படும் அந்த சிறைப்பகுதி அமைந்துள்ள லாட்ஜ்களிலும் புகழேந்தியின் இருநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் தங்கியிருந்தனர். அவர்களில் எழுபது பேர் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சசிகலாவின் தேவைகளை கவனித்து வந்த அவர்களை திடீரென "வேண்டாம்' என டி.டி.வி.தினகரன் நீக்க முயன்றார்; அதை சசிகலா ஏற்கவில்லை.


  sasi



டி.டி.வி.தினகரன், புகழேந்திக்கிடையே மோதல் வலுத்து வரும் நிலையில்தான் சிறையில் ரெய்டு நடந்துள்ளது. போலீசார் நடத்திய ரெய்டில் சிறையில் கத்தி, கஞ்சா, குடிக்க உபயோகப்படுத்தும் குடுவை, சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. சுதாகரன் அறையில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேபோல் பெண்கள் சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோர் அறையிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என சிறைத்துறை அறிவித்தது. மற்ற கைதிகள் உபயோகிக்கும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும்போது சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உபயோகிக்கும் செல்போன்கள் போலீசார் கண்களில் எப்படி படாமல் போனது?

  ammk



சசிகலா முறைகேடாக சிறையில் சலுகைகளை அனுபவித்து வருகிறார். அவருக்கு பணிவிடை செய்ய பெண் கைதிகள் இருக்கிறார்கள். சமையல் முதல் அறைகளை சுத்தப்படுத்துவது வரை பெண் கைதிகளை வைத்திருக்கும் சசிகலா... தனக்கான சிறை வளாகத்திலேயே இரண்டு, மூன்று அறைகளை கொண்ட காம்ப்ளக்ஸையே ஆக்கிரமித்திருக்கிறார். அவருக்காக சமைக்க எலெக்ட்ரிக் ஸ்டவ், குளிர்சாதன பெட்டி எல்லாம் இருக்கிறது. சிறையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளில் சசிகலா அடிக்கடி சிறைக்கு வெளியே சென்றுவிட்டு உள்ளே வருகிறார். இதற்காக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார். சிறைத்துறை தலைவராக இருந்த ஒருவருக்கு ஹைதராபாத் நகரில் உயர்ந்த ரக ப்ளாட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த சிறைத்துறை அதிகாரியும், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனுக்கு உதவினார் என போலீசாரால் குற்றஞ்சாட்டப்படும் ஆஸ்திரேலியன் பிரகாஷும் சந்தித்து பேசினார்கள் என சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா குற்றம் சாட்டியிருந்தார். ரூபாவின் குற்றச்சாட்டுகள் உண்மையா என ஆராய, வினய்குமார் என்கிற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அப்பொழுது முதல்வராக இருந்த சித்தராமையா அமைத்தார்.

 

jail



வினய்குமார் நடத்திய விசாரணையில் "சசிகலா சிறை விதிகளை மீறினார். விதிகளை மீறி சசிகலா சலுகைகள் அனுபவிப்பதற்கு அதிகாரிகளின் லஞ்ச ஊழலே காரணம். சிறைத் துறை அதிகாரிகள் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். அதைப் பற்றி கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்' என அறிக்கை கொடுத்தார். ஆனாலும் சசிகலா விஷயத்தில் சித்தராமையா கண்டுகொள்ளாமலேயே இருந்தார். அதன்பின், குமாரசாமி அரசிலும் தேவேகவுடா மூலம் சசி தரப்பு இதே செல்வாக்குடன் இருந்தது. சிறையிலேயே கன்னடம் கற்க ஆரம்பித்தார் சசிகலா. நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலைக்கு முயற்சி செய்து வரும் சசிகலா, சமீபத்திய ரெய்டிலும் தப்பித்து விட்டார் என்றார்கள் அவரது உறவினர்கள். ரெய்டுக்கு காரணம் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் எதிரிகள்தான். எடியூரப்பாவிற்கும் நரேந்திர மோடிக்கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும், கர்நாடகாவில் எடியூரப்பா தயவின்றி பா.ஜ.க. வெற்றிபெற முடியாத நிலையே நீடிக்கிறது.

 

roopa



சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அரசியலுக்குரிய அத்தனை வழிகளையும் பயன்படுத்தி முதல்வரானார் எடியூரப்பா. அவரது இந்த திறமை மோடிக்குப் பிடிக்கவில்லை. எடியூரப்பாவை இன்று வரை மோடி சந்திக்கவேயில்லை. அமைச்சரவை கூட அமைக்க விடவில்லை. முதல்வராக இருக்கக்கூடாது என்கிற மோடியின் விருப்பத்திற்கு மாறாக அமைச்சரவையை உருவாக்கினார். அதில் நான்கு துணை முதலமைச்சர்களை நியமித்தார். தனக்கு நெருக்கமான ஷோபாவையும் தனது மகனையும் அமைச்சராக்க எடியூரப்பா முயன்றார். மோடி அதற்கு சம்மதிக்கவில்லை. எடியூரப்பா எதை பேசினாலும் அதற்கு எதிராக கர்நாடகா பா.ஜ.க. தலைவர்களை பேச வைக்கிறார் மோடி. எடியூரப்பா ஒரு ஊழல் பேர்வழி. அவருக்கு பதில் இளைஞர் ஒருவரை முதல்வர் ஆக்க வேண்டும் என மோடி முயல்கிறார். அதற்காகத்தான் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை குறி வைத்தார். ஆனால் எடியூரப்பா உதவியுடன் ரெய்டிலிருந்து சசிகலா தப்பித்தார்'' என கர்நாடகா அரசியலில் சசிகலாவின் தலை உருட்டப்படுவதை விளக்குகிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.