Skip to main content

இரண்டாம் நாள் நிகழ்வு: 10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா மற்றும் வட அமெரிக்க பேரவையின் 32  ஆம் ஆண்டு விழா

Published on 08/07/2019 | Edited on 09/07/2019

10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா மற்றும் வட அமெரிக்க பேரவையின் 32  ஆம் ஆண்டு விழா நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் ஆரம்ப நாள் உற்சாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் தொடர்ந்தன. 
 

america


விழாவின் கருப்பொருளான ‘கீழடி என் தாய்மடி’ என்பதற்கு ஏற்ப கீழடி அகழ்வாய்வின் கண்டெடுப்புகளின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. வள்ளுவர் கோட்டத்தின் மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின. திரு.ஜேம்ஸ் வசந்தன் பங்குபெற்ற திருக்குறள் மறை ஓதல் நடந்தது. அடுத்ததாக வீணை இசை வாசிக்கப்பட்டது. கனடா தமிழ் காங்கிரஸ் சார்பாக தமிழுக்கு வந்தனம் செலுத்தப்பட்டது. 

 

சிறுவர்கள் பங்கு பெற்ற திருக்குறள் தேனீ, திருக்குறள் தூதர் போட்டிகளின் இறுதி சுற்று நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இளையோர் திறன் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு "நட்சத்திரம் 2019" பட்டம் வழங்கப்பட்டது. சிகாகோ தமிழ் சங்கத்தினரின் கதம்ப நடனம் மற்றும் நியூஜெர்ஸி தமிழ் சங்கத்தின் நகைச்சுவை நாடகமும் அரங்கேறின. குறும்பட போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. டாக்டர்.சுடலைமுத்து அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து சிகாகோ தமிழ் சங்கம் மற்றும் கனடா தமிழ் சங்கங்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. 

ஆர்.ஆர். சீனிவாசன் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகள் குறித்த சிறப்புரை நிகழ்த்தினார். சீர்காழி சிவசிதம்பரம் தமிழிசை நிகழ்ச்சி நடந்தது. டி.ஏ.பி. (TAP)  விருதுகள் வழங்கப்பட்டன. கு. ஞானசம்பந்தம் நடுவராக பொறுப்பேற்று நடத்திய தமிழ் இலக்கியங்களின் வினாடி வினா நிகழ்வு பார்வையாளர்களின் கருத்தைக் கவர்ந்தது. சங்கத்தமிழ் படும் மங்காத தமிழ் மரபு நாட்டிய நடனம் அரங்கேற்றப்பட்டது. 10 ஆம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நவி பிள்ளை (ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயர்ஆணையர்), திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி (US Congressman), தமிழ்நாட்டின் தமிழ் கலாச்சாரத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட விழாவின் முக்கிய தலைவர்களின் தலைமையில் சிறப்பாகத் துவங்கியது. 

தன்னார்வத் தொண்டர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. சிலம்பம் அருணாச்சல மணி தலைமையில் தமிழக கலைஞர்கள் மற்றும் அமெரிக்க கலைஞர்களும் இணைந்து நடத்திய தமிழ் மரபு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.  இங்கிலாந்து நடன குழுவினர் ‘தாய்நாடு அதில் ஒரு தாய் வீடு’ என்ற தலைப்பில் குழு நடனம் நிகழ்த்தினார். யுவன் ஷங்கர் ராஜா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி இரவிலும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நிறைவாக நடைபெற்றது. நன்றி உரையுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.
 

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.