Skip to main content

டவுன் சிண்ட்ரோம் ஒரு தொற்று நோயல்ல

Published on 21/03/2018 | Edited on 21/03/2018

மார்ச் -21 உலக டவுன் சிண்ட்ரோம் தினம்

 

Down Syndrome boy

உலக தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடுகள் எந்தளவுக்கு முன்னேற்றம் அடைகிறதோ, அதே அளவுக்கு மக்கள் நோய்கள் வாங்குவதிலும் முன்னேற்றம் அடைகிறார்கள். புதிய, புதிய நோய்கள் மாதந்தோறும் உருவாகிக்கொண்டே உள்ளது. இதில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்கள் கண்டுக்கொள்ளாத ஒரு நோய் டவுன் சிண்ட்ரோம்.

மனித உடலில் இரண்டு விதமான குரோமோசோம்கள் இருக்கும். பிறக்கும் குழந்தைகள் இந்த இரண்டு குரோமோசோம்களை தாண்டி மூன்றாவதாக ஒரு குரோமோசோம் கொண்டு பிறந்தால் அந்த குழந்தை டவுன் சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

காரணம், மூன்றாவதாக ஒரு குரோம்மோசோம் மனித உடலில் இருந்தால் சில புற்றுநோய்கள், தோல்நோய், இதயநோய், கண் சிறுத்துயிருத்தல், சிறுநீரக பிரச்சனை, தைராய்டு, வலிப்பு, காது கேளாமை போன்ற பிரச்சனைகள் சிறுவயதிலேயே ஏற்பட்டுவிடும். இதற்கு காலம் முழுவதும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிவரும். அவர்களின் உடல் தன்மைதான் காட்டித்தரும்மே தவிர மற்ற குழந்தைகளைப்போல கற்றுக்கொள்வதில் பிரச்சனையில்லை. ஆனாலும் இவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் இந்தியாவில் சிலயிடங்களில் மட்டுமே உள்ளன.

வயது அதிகமான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நேரிடும்போது, இந்நோய் உருவாகிறது. கர்ப்ப காலத்திலேயே இந்த நோய் உள்ளதா என அறிய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அதற்கான விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் பெரும்பாலும் இதில் மருத்துவர்களும் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இதனால் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் அதில் ஒரு குழந்தை டவுன் சிண்ட்ரோம் நோய் தன்மையோடு பிறக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்த நோயை முதன் முதலில் கண்டறிந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் ஜான் லாங்டன் டவுன் என்பவர் தான். இந்நோயை 1862ல் தனது ஆராய்ச்சிகள் மூலம் எப்படி ஏற்படுகிறது கண்டறிந்தார். அதனாலே அவர் பெயரின் பின்பாதி இந்த நோய்க்கு வைக்கப்பட்டது.

உலகளவில் இந்நோயால் இதுவரை சுமார் 30 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் இந்நோய் தன்மையுடன் இருப்பதாக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வு கேரளாவில் ஓரளவு உள்ளது என்பதாலும், இந்நோய்க்கு நீண்ட சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால் இந்த நோய்க்கான சிகிச்சை இலவசமாக வழங்க கேரளா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உட்பட மற்ற மாநிலங்கள் இதில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

Protaste



இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திய உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 21ந்தேதியை உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்துள்ளது. மனித உடலில் குரோமோசோம் 21 என்பது 3வது குரோமோசமாக உருவாவதால் 21/3 என்கிற மருத்துவ அடையாளத்தை குறிக்கும் வகையில் 21ந்தேதி மார்ச் மாதத்தை தேர்வு செய்தனர். 2012 முதல் இதற்கான விழிப்புணர்வு பணியை செய்யும்படி உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்திவருகிறது.

இது தொற்று நோயல்ல அதனால்  மக்கள் அச்சப்படத்தேவையில்லை, இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், சாதாரண பள்ளிகளில் இந்த பிள்ளைகளை சேர்க்க வேண்டும், பாசத்தை காட்ட வேண்டும் என்கிறது மருத்துவ உலகம். ஆனால் இதனை செய்ய வைக்க வேண்டிய அரசாங்கம் அசட்டையாக இருக்கிறது.

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

 

 

 

Next Story

மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு; சிவகாசி மருத்துவர்கள் நல்கிய உடலுழைப்பு!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Doctors planting saplings in the Miyawaki method

 

இந்த உலகம் எதனால் யாரால் வாழ்கிறது என்றால், தனக்கென வாழாது பிறருக்கென வாழும் ஒரு சிலரால்தான் என மூதோர் கூறியுள்ளனர். தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்தலே பிறப்பின் இன்பம் என்பதை அவ்வப்போது யாரோ செய்யும் சேவைகளின் மூலம் பார்த்திருப்போம். சிவகாசியிலும் அப்படியொரு சேவையில் பல மருத்துவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், அது மருத்துவ சேவையல்ல. சேற்றிலும் சகதியிலும் இறங்கி இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக உடலுழைப்பை நல்கிய சேவை அது.  

 

சிவகாசி பெரியகுளம் கண்மாயின் வடமேற்கு கரையில், கழிவுநீர் தேக்கக்குட்டை கரையில், மியாவாக்கி முறையில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது, சிவகாசி மருத்துவர்கள் அனைவரது பங்களிப்போடு நடந்தது. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை என எப்போதும் பரபரப்பாக இயங்கும் மருத்துவர்கள், ஆர்வத்துடன் மரக்கன்றுகளை  நடவு செய்து வியப்பில் ஆழ்த்தினர்.   

 

Doctors planting saplings in the Miyawaki method

 

இச்சேவையில் டாக்டர்களான சுப்புராஜ், ரகுநாதன், கதிரவன், பாலசுப்பிரமணியன், சோலைக்குமார், ரத்தினம், சண்முகராஜ், ராஜேஷ் தர்க்கர், மணிகண்டன், பரத், சுதா மற்றும் பல பெண் மருத்துவர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர்.  பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளின்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். சிவகாசி மருத்துவர்களோ, பெரிய அளவில் பணியாளர்களே இல்லாமல் தாங்களே பணியாளர்களாக மாறி செயல்பட்டனர். நமது சமுதாயத்தில் சமூக சேவையின் அவசியம் பலவழிகளிலும் வலியுறுத்தப்படுகிறது. 

 

மியாவாக்கி: நகரங்களில் காலியாக இருக்கும் பகுதிகளில் அல்லது வீடுகளின் பின்புறங்களில் உள்ளூர் மரங்களையும் அவற்றின் விதைகளையும் கொண்டு குறுங்காடுகளை உருவாக்குவதே மியாவாக்கி முறையாகும். குறைந்த அளவுள்ள இடத்தில் அதிக மரங்களை நடுவதன் மூலம், சூரிய ஒளியைத் தேடி அவை உயரமாக வளரும் என்பதே இதன் அடிப்படை ஆகும்.