Skip to main content

ஓட்டுக்கு நோட்டு! மகளிர் படை ரெடி! இலையை சமாளிக்குமா சூரியன்?

Published on 06/03/2021 | Edited on 06/03/2021
ddd

 

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்றபடி தி.மு.க. தலைவர் வலம் வர, "வெற்றிநடை போடும் தமிழகமே' என எடப்பாடி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

 

மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வது, அதனைத் தீர்த்து வைக்குமளவு மக்களிடம் நம்பிக்கையை வரவழைப்பது ஸ்டாலினுக்கான வியூகங்களை ஐபேக் வகுக்க, அ.தி.மு.க. அரசு நிறைவேற் றிய திட்டங்களை டிஜிட்டல் வீடியோவாக்கி, அதனை மேடையிலுள்ள மெகா ஸ்கிரீனில் ஓடவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக் கான ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது சுனிலின் நிறுவனம்.

 

சங்கரன்கோவிலில் நடந்த எடப்பாடியின் தேர்தல் பரப்புரை மகளிர் கூட்டக் கலந்துரையாடலில் ஐ.டி. அணி, வந்திருந்த ஆண்கள் -பெண்களிடம் மைக்கைக் கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல வைத்தபோது, எதிர்பாராத வகையில், பேசிய வேப்பங்குளம் மஞ்சுளாவும், புளியம்பட்டியின் வேல்சாமியும், ""கிராமங்களில் எங்க புள்ளைக ரொம்பப் பேரு படிச்சிட்டு வேலையில்லாம தவிக்கிறாங்க. டி.என். பி.எஸ்.சி. பரீட்சை எழுதி என்னைக்கி எங்க புள்ளைக வேலைக்கிப் போவ. அதனால அதுமாதிரி பரீட்சை வைக்காம, படிச்சி முடிச்ச சீனியாரிட்டிப்படி வேலை கொடுங்க'' என்று பேசியது கண்டு அரண்டுபோனது. அடுத்து மக்களிடம் மைக் கொடுத்தால் வேறு மாதிரி ஆகிவிடும் என்பதால் நாசூக்காக நிறுத்திக்கொண்டது.

ddd

எடப்பாடியின் தேர்தல் பரப்புரை வருகைக்குப் பின்னர் இலைக் கட்சியினரிடமிருந்தே அவர்களின் தேர்தல் நேர வியூகங்கள் தொகுதிகளில் கசியத் தொடங்கியுள்ளன.

 

""தொகுதியின் ஒவ்வொரு வார்டிலுமுள்ள அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் என இருவர் இருப்பர். அவர்கள் இரண்டு பேருக்கும் தேர்தல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை வேட்பாளரால் சன்மானமாகத் தரப்படும். அவர்கள் சார்ந்த வார்டுகளில் கட்சியைச் சேர்ந்த பெண்கள், அவர்களுக்குப் பரிட்சயமானவர்கள் என 25 பேர் திரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் நம்பர்கள், முகவரிகள் அத்தனையும் கலெக்ட் செய்யப் பட்டுள்ளதாம். இந்த 25 பெண்களுக் கும் வார்டிலுள்ள வாக்காளர்களை, தலைக்கு இத்தனை பேர் என பங்கீடும் செய்யப்பட்டுள்ளது.

 

இதில் அந்த 25 பெண்களுக்கும் கூலியாகத் தலா ஒரு தொகை தனியாகத் தரப்படும். வாக்காளர்களுக்குத் தரப்படும் பணத்தில் அவர்கள் கைவைக்கக்கூடாது. அந்த 25 பெண்களும் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட வாக்காளர்களிடம் வோட்டுக்கு இவ்வளவு என்று வேட்பாளர் தரும் தொகையை அப்படியே கொண்டுபோய் சேர்த்துவிட வேண்டும். அதன்பின் அவர்கள் பணப்பட்டுவாடா செய்த வாக் காளர்களின் பெயர்கள், அவர்களின் அத்தனை மொபைல் நம்பர்களையும், வேட்பாளர் தரப்பிடம் சேர்த்து விடவேண்டும். பணம், வாக்காளர் களுக்கு முறையாகப் போய்ச் சேர்ந்துவிட்டதா என்பதை வாக்காளர்களிடமே செக்கப் செய்து கொண்டுவிடுமாம் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு. இப்படிப்பட்ட பக்காவான ஏற்பாடுகள் செய்யப் பட்ட இந்தப் பெண்களின் டீம், தேர்தல் நேரத்தில் ஓவர் நைட்டில் சிந்தாமல் சிதறாமல் ஓசையின்றிக் காதும் காதும் வைத்தது போன்று பணப்பட்டுவாடாவை முடித்து விடும். இதுதான் வாக்காளர் ஆபரேஷனுக்காகக் கட்சித் தலைமை வைத்திருக்கிற மகளிர் வியூகம்'' என்கிறார்கள் இலைத்தரப்பு நிர்வாகிகள்.

 

மேலும் ""நகர மற்றும் ஒன்றியச் செயலாளர்களுக்கு வெயிட்டான தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கு. தவிர, தற்போது தமிழகம் முழு வதும், புதிய குடிநீர் பைப்லைன்கள் போடப்பட்டு வருவதால் அதற்காகத் தோண்டப்படும் சாலைகளில் புதிதாக தார்ச்சாலைகள் தமிழகம் முழுக்க போடப்பட்டு வருகின்றன. அப்படி தார்ச்சாலைகள் போடப்படுகிற இடத்தை ஒட்டியுள்ள இரண்டு பக்கத்திலுமுள்ள இரண்டு வார்டு களைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் இரண்டு கிளைச் செயலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் கணிசமான தொகையைக் கமிசனாகக் கொடுத்துவிடவேண்டும் என்பது வாய்மொழி ஆணையாம். இப்படி வரப்போகும் தேர்தலில் இலைக் கட்சியின் நிர்வாகிகளின் காட்டில் பண அடைமழைதானாம்.

ddd

வழக்கம்போல் பிரச்சாரம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், இலைத்தரப்பு கரன்சியையே இந்தத் தேர்தலின் பிரம்மாஸ்திரமாகவும் நாகாஸ்திரமாகவும் பயன்படுத்தும் திட்டம் வைத்திருக்கிறது'' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

 

"தி.மு.க.வில் ஆட்சியமைந்த 100 நாட்களில் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம்' என்று வாக்குறுதியாகவே தரப்படுவதால் தொகுதிக்கு இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்பிக்கையில் மனுக்கள் அளிக்கிறார்கள். மனுக்கள் கொடுப்பதோடு நின்றுவிடக்கூடாது. நாம் வாக்களித்தால்தானே அவர்களால் ஆட்சியமைக்க முடியும். நம் குறைதீரும் என்ற எண்ணத்தில் மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு வாக்களிப்பார்கள். நமது வாக்கு வங்கி பெருகி வெல்வோம் என்பது சூரியத் தரப்பின் நம்பிக்கையாக உள்ளது.

 

வைட்டமின் ப இல்லாமலா... அதற்கு சூரியத் தரப்பு என்ன வியூகங்கள் வகுத்திருக்கிறது என்பதில் இருக்கிறது கழகங்களின் வெற்றி வாய்ப்புகள்!

 

 


 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.