Skip to main content

திமுகவிடம் லைசென்ஸ் இருக்கு...வர வேண்டியது வரும்...அதிர வைத்த எடப்பாடி!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

தமிழக முதல்வர் எடப்பாடி தன் வசம் வைத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் விடப்படும் டெண்டர்கள் அனைத்திலும் 13 சதவீதம் கமிஷன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் துறையைச் சேர்ந்தவர்கள். தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் அதிக டெண்டர் எடுப்பதாக முதல்வர் எடப்பாடியிடம் அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள் குற்றச்சாட்டு வைக்க, அதற்கு முதல்வரே, "தமிழக முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் தொழில்முறை லைசென்ஸ் வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் எடுப்பதில் தவறு எதுவும் கிடையாது. உங்களுக்கு தேவையான கமிஷனை வாங்கிக்கொள்ளுங்கள்'' என அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டாராம். 

 

dmk



ஆளும்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கொடுத்தால் போதும் என்று சொன்ன முதல்வரின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்போது முதல்வருக்கே தெரியாமல் 3 சதவீதம் கூடுதலாக கேட்டு டெண்டர் போடுவதற்கு முன்னமே திருச்சி ஒப்பந்தக்காரர்களிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்கள். வருகிற அக்டோபர் 1-ம் தேதி CRIDP என்கிற பெயரில் ஒட்டுமொத்தமாக 120 கோடி ரூபாய்க்கான டெண்டர் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அக்டோபர் 4-ம் தேதி டெண்டர் திறக்கிறார்கள். இதற்கு முன்கூட்டியே 13 சதவீதம் கமிஷன் தொகையாக 15.60 கோடி வாங்குவார்கள். ஆனால் இந்த முறை 3% அதிகப்படுத்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களை டார்ச்சர் செய்கிறார்கள் என்கிற சத்தம் அதிகமாக இருக்கிறதாம். லால்குடி, முசிறி, துறையூர், திருச்சி, மணப்பாறை என ஒவ்வொரு ஏரியா அதிகாரியும் தன்னுடைய ஏரியாவில் உள்ள ஒப்பந்தக்காரர்களிடம் கூடுதல் தொகை கேட்பதுதான் தற்போது பெரிய பேச்சாக இருக்கிறது. 


என்ன நடக்கிறது? கமிஷன் தொகை உயர்வுக்கு யார் காரணம் என்று விசாரிக்கையில்... 

"திருச்சியை பொறுத்தவரையில் ஒப்பந்தக்காரர்கள் சார்பாக கண்ணையன் என்பவர் கடந்த சில வருடங்களாக கமிஷன் தொகையை வசூல் செய்து மொத்தமாக கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரை கடந்த வருடம் ஒதுக்கிவிட்டு திருக்குமரன் என்பவர் வசூல் செய்து கொடுத்து வந்தார். அவர் அந்த 13 சதவீதத்தில் பாதியை மட்டும் நெடுஞ்சாலைத்துறையிடம் கொடுத்து விட்டு மீதியை முதல்வரிடம் கொடுத்துவிட்டேன் என்று ஏமாற்றியதால் இந்த முறை உஷாரான நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி கூடுதலாக 3 சதவீதம் கேட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்'' என்கிறார்கள்.
 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.