Skip to main content

பதவி தப்புமா? ஓ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அரசின் முதலமைச்சராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு முன்னதாக, சசிகலா குடும்பத்தை எதிர்த்து  முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருந்தன.

அந்த நிலையில்,  "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் " என்று உத்தரவிட்டார் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசகர்ராவ். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி,  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

 

Will he resign? Case against OPS in Tamil Nadu politics

 

ஆனால் எடப்பாடி பழனிசாமி கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த 11 அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். எடப்பாடி அரசுக்கு எதிராக இருந்து வந்த ஓ.பி.எஸ்., டெல்லியில் இருப்பவர்கள் உதவியுடன் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தார். துணை முதலமைச்சராகவும் ஆனார்.

அந்த சூழலில், ' கொறடா உத்தரவை மீறிய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் மீது தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என்று  சபாநாயகரிடம் மனு அளித்தது திமுக . ஆனால், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார் சபாநாயகர். டிடிவி தினகரன் ஆதரவாளர்களை தகுதி நீக்கம் செய்தபோது, இவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்பதுதான் திமுகவின் கேள்வியாக இருந்தது. தாங்கள் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கவில்லை என்பதால், திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
 

Will he resign? Case against OPS in Tamil Nadu politics

 

அப்போது உயர்நீதிமன்றம், "சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா ? என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் இந்த நீதிமன்றம் நேரடியாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது " என்று கூறி 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய திமுகவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய சூழலில், நீண்ட மாதங்களாக வழக்கு விசாரணைக்கு வராமலே இருக்கிறது.

இந்த நிலையில்,  மணிப்பூரில் 2017ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக உறுப்பினர்களை பெற்றிருந்தபோதும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பாஜகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில்,  சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இதனை எதிர்த்து , சிக்கிம் உயர்நீதிமன்றத்தில், காங்கிரஸ் முறையிட,  காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயற்நீதிமன்றம். இதையடுத்து  காங்கிரஸ்,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய,  அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், " இந்த பிரச்சனையில் சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் மீண்டும் ஒரு முறை சபாநாயகரிடம் மனு அளியுங்கள். நான்கு வாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனில் உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் " என்று கூறியதோடு,  "  சபாநாயகரின் அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் "  என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தது.

 

Will he resign? Case against OPS in Tamil Nadu politics


மணிப்பூர் காங்கிரஸ் மனு மீது, மீண்டும் சபாநயாகரிடம் மனு அளிக்குமாறும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும்  உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து, திமுக தரப்பும் , ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தங்கள் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி  கடந்த வாரம் புதிதாக மனு அளித்தது. இந்த நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்த வழக்கு குறித்து டெல்லி வழக்கறிஞர்களிடம் பேசிய போது, "சட்டமன்றத்திற்குள் சபாநாயகரின் அதிகாரம் மட்டுமே செல்லும். சட்டமன்றத்திற்குள் அவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. சபாநாயகருக்கான அதிகாரம் குறித்து பல்வேறு வழக்குகள், பல்வேறு நீதிமன்றங்களில் முந்தைய காலங்களில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  பல்வேறு தீர்ப்புகளும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை, தன்னிடம் அளிக்கப்பட்ட மனு குறித்து சபாநாயகர் ஒரு முடிவைத் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. சபாநாயகரின் முடிவு செல்லுமா? செல்லதா? என்பது குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியும்.  ஆனால்,
 

Will he resign? Case against OPS in Tamil Nadu politics

 

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான  புகாரில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த வகையில்,  ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என  சபாநாயகரை நோக்கி கேள்வி கேட்க முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.

மணிப்பூர் சட்டமன்ற விவகாரத்தில்,  மீண்டும் சபாநயாகரிடம் மனு அளிக்குமாறு கூறிய உச்சநீதிமன்றம், ' சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனில்  மீண்டும் தங்களை நாடலாம் என கூறியிருப்பதால், அதுபோலவே,  மீண்டும் சபாநாயகரிடம் முறையிடுங்கள் என திமுகவுக்கு  அறிவுறுத்த வாய்ப்பிருக்கிறது " என்கின்றனர்.

ஓபிஎஸ்சுக்கு எதிரான வழக்கு 4-ந்தேதி விசாரணைக்கு வரவிருப்பதால் அரசியலில் மீண்டும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.