Skip to main content

"தம்பிகளுக்கு வழிவிடுங்கள் என்று நான் எதற்காக பேசினேன்.."? - சீக்ரெட்டை உடைத்த எஸ்.ஏ.சி!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

k

 

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் கமலின் 60ம் ஆண்டு திரைவிழாவில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர், " முதலில் ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துவிடுங்கள், பிறகு தம்பிகளுக்கு வழிவிடுங்கள்" என்று கூறியிருந்தார். அவரின் அந்த பேச்சு அடுத்த சில வாரங்களுக்குத் தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளானது. இந்நிலையில் இதுதொடர்பாக அவரிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய இந்த கேள்விக்கு அவரின் எதார்த்தமான பதில் வருமாறு, " நான் அந்த விழாவில் அப்படி பேசியது உண்மைதான். ஆனால் எதற்காக பேசினேன் என்று பார்க்க வேண்டும். காமராஜருக்குப் பிறகு ஏதோ ஒரு வகையில் சினிமாவை பின்புலமாகக் கொண்டவர்கள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்து வருகிறார்கள். அந்த வகையில் அது எப்போதும் தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் தான் அப்படிக் கூறினேன்.

 

ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. இதை விஜய்யை மனதில் வைத்துக் கூறினேனா என்று கேட்கிறீர்கள், அப்படி இல்லை, அனைத்து ஜூனியர் தம்பிகளும் களத்திற்கு வரத் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் நான் சினிமாக்காரன். எதார்த்தமாக யோசிக்கக்கூடியவன். அந்த வகையில் ரஜினியும், கமலும் வந்தால் அவர்கள் வழியில் அடுத்து அவர்கள் தம்பிகளும் அதே வழியில் பயணிப்பார்களே என்ற ஆசையில் வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. விமர்சனம் செய்பவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மனதில் தோன்றியதைக் கூறினேன், அவ்வளவுதான். இடைவெளி விழுந்தாலும் சினிமா நண்பர்கள் அந்த இடத்திற்கு வர வாய்ப்புள்ளதாகவே நினைக்கிறேன்" என்றார்.

 

 

Next Story

அப்பாவின் பேச்சை அப்பவே கேட்காத விஜய்

Published on 05/01/2023 | Edited on 06/01/2023

 

 “The criticism of Vijay; The unfulfilled dream of a doctor” - S.A. Chandrasekar

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் “விஜய்யின் சினிமா ஆசையை ஆரம்பத்தில் நிறைவேற்ற ஏன் தயக்கம் காட்டினீர்கள். அத்தோடு விஜய் நடிக்க ஆரம்பித்த பிறகு வந்த விமர்சனம் என்ன” என்ற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’ ஓடவில்லை. ஆனால் அந்த படப்பிடிப்பின் நாட்களில் விஜய்க்குள் ஒரு நடிகன் ஒரு கலைஞன் இருப்பதை நான் உணர்ந்தேன். அவனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் அவரை வைத்து நான் பல படங்கள் எடுத்தேன். 

 

நாளைய தீர்ப்பு ஓடவில்லை அதனால் விமர்சனம் எதுவும் வரல., அடுத்து செந்தூர பாண்டிக்கு வரவில்லை. அது விஜயகாந்த்திற்காக ஓடியது என்று விட்டுட்டாங்க போல. அடுத்தபடியாக ரசிகன், முழுக்க முழுக்க ரொமாண்டிக் கமர்சியல் படம் 150 நாட்கள் ஓடியது. அதற்கு தான் விமர்சனம் வந்தது.  

 

நான் விஜய்யை சினிமாவுக்கு போகக் கூடாது என்று சொல்லவில்லை. என்னோட பொண்ணு மூன்று வயதில் கேன்சர் நோயால் இறந்து போயிடுச்சு. அது என்னை ஆறு மாத காலம் இயங்கவிடாமல் செய்தது. அதனால் எனக்கு விஜய்யை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதுவும் கேன்சர் ஸ்பெசலிஸ்ட் டாக்டராக்கி இலவச மருத்துவமனை ஒன்றை உருவாக்கி முழுக்க முழுக்க கேன்சரை குணப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனியொரு குழந்தை கேன்சரால் இறந்துவிடக்கூடாது என்பது என் நோக்கமாக இருந்தது.

 

விஜய்க்கு நடிப்பின் மீதே ஆர்வம் இருந்ததால் அவரது அப்பாவின் கனவு லட்சியமான கேன்சர் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் கனவு நிறைவேறாமல் போனது. 

 


 

Next Story

“குடும்ப உறவுகள்தான் மிகவும் முக்கியம்" - நினைவுகளைப் பகிர்ந்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

“Family relations are the most important - Director S.A.Chandrasekar shared his memories 

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் நாம், “உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும், நீங்கள் சமூக அக்கறை உள்ள படங்கள் எடுக்க காரணம் என்னவாக இருந்தது” போன்ற கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...

 

என்னதான் அப்படி இப்படின்னு போனாலும் சண்டை சச்சரவு ஆனாலும் குடும்ப உறவுதான் முக்கியம். பணமா? பாசமா? என்று பார்த்தால் பாசம்தான் முக்கியம். பணம் பெரிசில்லை வாழ்க்கையில். உறவுகளின் முக்கியத்துவம் இப்பெல்லாம் இல்லாமல் போய்விட்டது. இப்பெல்லாம் உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. கணவன் மனைவிதான் எல்லாமே என்றாகிவிட்டது. அதிகபட்சம் போனால் கூட குழந்தைகள் இருக்கிறார்கள். அவ்வளவுதான் என்று ஆகிவிட்டது. 

 

ஸ்ரீதர், கே.சங்கர், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் உணர்வுக்கும், உறவுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தந்து படமெடுத்த சமயத்தில், நான் சினிமாவில் நுழைந்தபோது சமூக அக்கறையை மையமிட்டு படங்கள் எடுத்தேன். அதுவே எனது பாணியும் ஆகிப் போனது.

 

சட்டம் எல்லாருக்குமே சமமாக இருக்கிறது. ஆனால் வேறுபாடு ஏன் ஏற்படுகிறது என்பதை மையமிட்டு படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அது எனக்குத் தனியான அடையாளத்தை தந்தது. சட்டம் சந்திரசேகர் என்பதுதான் என் பெயராகவே இருந்தது.