Skip to main content

தமிழ்நாட்டை பாஜக டார்கெட் செய்ய காரணம்! 

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

ஆந்திரா, கேரளா உள்பட 7 மாநிலங்களில் பா.ஜ.க.வால் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியவில்லை. ஆனால், அதைவிட தமிழ் நாட்டைத்தான் உடனடியாக டார்கெட் செய்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. காரணம், இங்கே பா.ஜ.க.வின் இந்துத்வா கொள்கைக்கு நேரெதிரான திராவிட சித்தாந்தம் தன்னுடன் இணைந்து போகக்கூடிய மதச்சார்பற்ற சமூக நீதி முற்போக்கு சக்திகளுடன் ஒன்றாகி வலிமையாக நிற்பதுதான்.

 

admk



தமிழ்நாட்டில் மத அரசியல் எடுபடாது என்பதால், சாதி வாக்குகளைக் குறிவைத்து அமித்ஷா வகுத்த அசைன்மெண்ட்படி வேலை நடக்கிறது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்கள் தங்கள் இனத்தின் கோரிக்கையை முன்வைத்து கூட்டணிக்குள் வந்தனர். வடக்கே வன்னிய சமுதாயத்தின் வாக்குகளைக் கொண்ட பா.ம.க., மேற்கே கவுண்டர் சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ள அ.தி.மு.க., தெற்கே முக்குலத்தோரில் கள்ளர் சமுதாயம் தவிர்த்து மற்ற இரு பிரிவினரின் அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள், பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள நாடார் சமுதாய வாக்குகள், தே.மு.தி.க. மூலம் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் இவற்றையெல்லாம் கணக்கிட்டுத்தான் கூட்டணியை உருவாக்கியது பா.ஜ.க மேலிடம். அது வெற்றியைத் தராத நிலையில், மாற்று வியூகங்கள் வகுத்து களமிறங்கத் தீர்மானித்துள்ளது'' என்கிறார்கள் டெல்லி பிரமுகர்கள். 


  bjp



"முதல் கட்டமாக, ரெய்டு மற்றும் வழக்குகளால் கூட்டணி விவகாரத்தில் வளைந்து கொடுத்த அ.தி.மு.க.வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்கான வர்களை ஓ.பி.எஸ். மூலம் நேரடியாக பா.ஜ.கவுக்குக் கொண்டு வர திட்டமிடு கிறது. திராவிடக் கட்சிகளில் அ.தி.மு.க. பிரமுகர்கள்தான், ஜெ. காலத்திலிருந்தே அயோத்தி கரசேவைக்கு ஆதரவான இந்துத்வா மனநிலையுடன் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் ஏற்காத நிலை யிலும், மாவட்ட மாநில அள விலான நிர்வாகி களில் பலர் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருப் பதால், இவர் களில் சாதி செல்வாக்குடன் உள்ளவர்களை ஓ.பி.எஸ். மூலம் குறி வைப்பது என்பது மோடி -அமித்ஷா வியூகம். அதற்கான அட்வான்ஸ் தான், தேனி வெற்றி'' என்கிறார்கள்.

 

admk



அடுத்த கட்டமாக, தி.மு.க. கூட்டணி மட்டுமில்லாமல் இதர கட்சிகள், இளைஞர்கள் என மொத்தமாக தமிழ் நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையும் கோ பேக் மோடி என்ற குரலும் ஒலித்து வருகிறது. எனவே, பா.ஜ.க.வை சித்தாந்த ரீதியாக வளர்க்க, ஏற்கனவே பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடத்தப் படும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகளைத் தொடர்வது, மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏ.பி.வி.பி.) மாநில மாநாட்டை நடத்துவது, மாணவர்களையும் இளைஞர்களையும் இந்துத்வா சிந்தனைக்குத் திருப்புவது என்பது முக்கிய வியூகமாகும். 2ஜி மேல்முறையீட்டு வழக்கையும், ப.சிதம்பரம் குடும்பத்திற்கு எதிரான வழக்குகளையும் வேகப்படுத்தி கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களின் எம்.பி. பதவிகளுக்கு நெருக்கடி உருவாக்கவும் திட்டமிடப்படுகிறதாம்.

 

dmk



பா.ஜ.க.வின் மாநிலத் தலைமையைப் பொறுத்தவரை தமிழிசைக்கு எதிரான குரல்கள் பலமாக ஒலித்தால், அவருக்குப் பதில் யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனையில், படுவேகமான கருப்பு முருகானந்தம், பக்குவமான வானதி சீனிவாசன் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிப்பதில் கூடுதல் அக்கறை செலுத்துமாறு ராம் மாதவ் பணிக்கப்பட்டுள்ளார்.த.மா.கா.வின் ஜி.கே.வாசனும் அவரது தொண்டர்களும் பா.ஜ.க.வுடன் இணைய வேண்டும் என்ற வியூகமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, மு.க.அழகிரியுடனும் தொடர்பில் உள்ளது பா.ஜ.க. எல்லாவற்றுக்கும் மேலாக, பா.ஜ.க. இன்னமும் நம்புவது ரஜினியைத்தான். எம்.பி. தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடுவேன் என ரஜினி ஏற்கனவே சொன்ன நிலையில், ‘எம்.ஜி.ஆர். போல அரசியலில் ரஜினி செல்வாக்கு பெறுவார் என திடீரென ஆடிட்டர் குருமூர்த்தியின் பேட்டி முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது. மோடியின் பதவியேற்புக்கும் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினியுடன் அழகிரி, ஜி.கே.வாசன், அ.தி.மு.க. பிரமுகர்கள், செல்வாக்கு மிக்க சாதி அமைப்புகளின் தலைவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் வேர் விடத் துடிக்கிறது பா.ஜ.க.


எடப்பாடி அரசு மிச்சமுள்ள இரண்டாண்டுகளை, மோடி தயவில் கடத்த நினைக்கும் சூழலில், ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை, சாகர்மாலா திட்டம், நீட் தேர்வு எனத் தமிழக விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் ஆகி யோரை பாதிக்கச் செய்யும் திட்டங்களில் பா.ஜ.க. காட்டும் தீவிரத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற கோட்பாட்டுக்கு சவால் விடும் தன்மையையும் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள 37 எம்.பி.க்கள் கடுமையாக எதிர் கொண்டு, மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கட் டாயம் உள்ளது.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.