அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் நேற்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது, சீதாக்கா என்பவர் அமைச்சராக பதவியேற்கும் போது, அரங்கமே அதிரும் அளவிற்கு பாகுபலி படத்தில் வருவதை போல அனைவரும் ‘சீதாக்கா...சீதாக்கா.. என்று கோஷம் எழுப்பியது, பலரையும் யார் இவர் என்று பலரும் கூகுளில் தேட வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து 2014 தேர்தலில் மீண்டும் தோல்வி அடைந்த சீதாக்கா, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான அவர், தெலங்கானாவின் மகிழா காங்கிரஸின் பொதுச்செயலாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் பலருக்கு நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்று உதவியுள்ளார். மேலும் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து மக்களின் ஆதர்ச நாயகியாகவே வலம் வந்துள்ளார். இதனிடயே 2022 ஆம் ஆண்டு ‘அரசியல் அறிவியலில்’ முனைவர் பட்டம் பெற்றார்.
இந்த நிலையில்தான் தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மாநிலத்தின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்ய அழைத்த போது. அவரின் பெயரை கேட்டவுடனே அரங்கத்தில் இருந்த பலரும் சீதாக்கா... சீதாக்கா என்று கோஷம் எழுப்ப அரங்கமே அதிர்ந்தது.