Skip to main content

ரஜினியின் ப்ராண்டிங் வல்லுனர் யார்? வியூகம் வகுப்பாளர்கள் உலகில் பரபரப்பு! 

Published on 01/11/2019 | Edited on 01/11/2019


 
அரசியல் கட்சிகளின் தேர்தல் கால செயல்பாடுகளையும் அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகளையும் அந்தந்த கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களே தீர்மானித்து வந்தன. அவைகளெல்லாம் வெறும் சம்பிரதாயமாக மாறிப் போன நிலையில், அரசியல் வியூக நிபுனர்களே தற்போது தீமானிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளனர். உலகம் முழுவதும் தொழில் நுட்பம் அசூர வளர்ச்சி அடைந்துள்ள சூழலில், மக்களிடம் தங்களது கட்சியின் செயல்பாடுகளை நிலை நிறுத்த  தேசிய கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை  ஒரு ப்ராண்டிங் வல்லுநர் தேவைப்படுகிறார். 

 

rajini



அந்த வகையில் அரசியல் வியூகம் வகுப்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் தேடுகிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகளின் வெற்றி-தோல்விகளுக்கு காரணமாக இருந்தவர் அரசியல் வியூக நிபுனர்களில் ஒருவரான ஐ பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர். இவரின் சில வியூகங்கள் வெற்றி பெற்றதால் பிரபலமானவர். ஆனால், சமீப காலமாக இவரது யோசனைகளும் திட்டங்களும் செல்லுபடியாகவில்லை. அதனால் பிரதான தேசிய கட்சிகள் இவரை கைவிட்ட நிலையில், மாநில கட்சிகள் மீது இவரது பார்வை விழுந்தது. 


 

 

அந்த வகையில், எடப்பாடியையும் ரஜினியையும் ஒரு கட்டத்தில் சந்தித்தார் பிரசாந்த் கிஷோர். இந்த சந்திப்பு கூட அண்மையில் நடந்தது அல்ல. பிரசாந்த் கிஷோரின் செயல் திட்டங்கள் குறித்து எடப்பாடியும், ரஜினியும் தனித்தனியாக தங்களது அறிவுஜீவி வட்டாரங்களில் விவாதித்திருக்கிறார்கள். அதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் வட மாநிலங்களுக்கு ஓ.கே. ஆனால், தமிழகத்துக்கு செட் ஆகாது என சொன்னதன் அடிப்படையில் எடப்பாடியும் ரஜினியும் பிரசாந்த் கிஷோரை தவிர்த்துள்ளனர். அதன் பிறகே கமலை அணுகினார் கிஷோர். ஆனால், கமலுக்காக பிரசாந்த் போட்டுக்கொடுத்த வியூகங்கள் சோபிக்கவில்லை. இதனால், கமலும் அவரை கைக்கழுவினார். 


 

 

இப்படிப்பட்ட சூழலில், மகாராஸ்ட்ராவில் சிவசேனாவுக்காக நடந்த முடிந்த தேர்தலில் பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் வியூகமும் வொர்க்-அவுட் ஆகாததால் கிஷோர் மீது சிவசேனா தலைமையும், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அதிர்ப்தி அடைந்துள்ளனர். 
 

இந்த நிலையில், மகாராஷ்ட்ரா தேர்தலை உற்று கவனித்த ரஜினிகாந்த், பிரசாந்த்தின் தேர்தல் வியூகம் குறித்து சிவசேனா தரப்பில் கேட்டு அறிந்திருக்கிறார். பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியூகம் பற்றி பாசிட்டிவ் சிக்னல் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் பிரசாந்த் கிஷோர் மீதிருந்த நம்பிக்கை ரஜினிக்கு குறைந்து போனது. இதற்கிடையே, தமிழகத்தின் கள நிலவரங்களை அறிந்த ப்ராண்டிங் வல்லுநர் ஒருவரை பற்றி அவர் விசாரித்திருப்பதாகத் தெரிகிறது. அவர், ஜான் ஆரோக்கியசாமி ! 

 

John Arokiasamy  -  prashant kishor


 

பாமகவின் அன்புமணிக்காக கடந்த 2016 தேர்தலில் ப்ராண்டிங் வல்லுநராக பணி புரிந்த ஜான் ஆரோக்கியசாமி, அந்த தேர்தலில் பலராலும் கவனிக்கப்பட்டவர். தமிழக அரசியல் நுணுக்கங்களையும், தேர்தல் கள நிலவரங்களையும், தமிழகத்திலுள்ள சமூக தாக்கங்களையும் அறிந்துள்ள ஜான் ஆரோக்கியசாமியின் ப்ராண்டிங் வியூகங்கள், பாமகவின் 4 சதவீத வாக்கு வங்கி 6 சதவீதமாக உயர்வதற்கு காரணமாக இருந்தன. இந்த நிலையில்தான், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிராண்டிங் வல்லுநரான ஜான் ஆரோக்கியசாமியை பற்றி தற்போது ரஜினிகாந்த் விசாரித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் அரசியலுக்குள் நுழைய காத்திருக்கும் ரஜினிக்கு, ப்ராண்டிங் வல்லுநராக செயல்படப்போவது யார் ? ரஜினி தேர்ந்தெடுக்கும் அந்த பிராண்டி வல்லுநர் யார் ? என்பதும் அரசியல் வியூகம் வகுப்பாளர்கள் உலகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது!  

 


 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!