Skip to main content

அதிமுக யாருக்குச் சொந்தம்? - முடிவுகட்டும் தேர்தல்! 

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

Who owns ADMK? - Let's end the election!

 

‘இது தேர்தல் அல்ல. நம் இனத்தவர்க்கான கணக்கெடுப்பு. நம் இனத்தவரைப் பழித்தவரைப் பழிவாங்கு. நீ எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும், வாக்களிக்க வேண்டிய சின்னம் இது மட்டும்தான். நம் இனத்திற்குத் துணை போனால், நாளை உன் தலைமுறை வாழும்’ - நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் களத்தில், தமிழகம் முழுவதும் வாட்ஸ்-ஆப்பில் பரப்பப்பட்ட தகவல் இது!

 

குறிப்பிட்ட ஒரு சாதியைத்தான் ‘இனம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். தங்கள் இனம் வாழ வேண்டுமென்றால், ஆட்சியிலோ, கட்சியிலோ, அத்தனை அதிகாரமும் தங்கள் கைக்கு வந்தாக வேண்டுமென்பதே, அந்த இனத்தில் ஒரு சிலரது நோக்கமும் திட்டமுமாக உள்ளது. ஒவ்வொரு சாதியினரும் இதே ரீதியில் வாக்களிக்க முற்பட்டால் தமிழகம் என்னாவது? சில கட்சிகள், சாதி அரசியலை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, பிரதான கட்சிகளைக் கவனத்தில் கொள்வோம்!

 

Who owns ADMK? - Let's end the election!

 

1949இல் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய நாளில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா ‘கொள்கை பரப்புவதே நமது முதல் பணி.’ என்றார். வைதீக மதத்தினூடாகவே தமிழரிடையே சாதி புகுத்தப்பட்ட நிலையில், ‘வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும்.’ என்று வலியுறுத்தினார். அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு, ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 1967இல் சட்டமன்றத்தில்,  இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து, சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேறச் செய்தார். அவருக்குப் பிறகு முதலமைச்சராகவும், இறக்கும் வரையில் திமுக தலைவராகவும் இருந்த கலைஞர் கருணாநிதி, உறுதியான கொள்கைப் பிடிப்புடனே வாழ்ந்தார்.

 

Who owns ADMK? - Let's end the election!

 

கலைஞருக்குப் பிறகு அக்கட்சியின் தலைவராகி 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும்கூட, ‘பிறப்பு அடிப்படையிலான சாதி, இன வேறுபாட்டை அகற்றி, தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில், திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட கலப்பு திருமண நிதியுதவி திட்டம் புதுப்பிக்கப்பட்டுச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும். ஆதிதிராவிடரோ, மலைவாழ் பழங்குடியினரோ, பிற இனத்தவரை மணந்துகொண்டால், நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படும்.’ எனக் குறிப்பிட்டு, பெரியார்,  அண்ணா, கலைஞர் உயர்த்திப் பிடித்த சாதி மறுப்பு கொள்கையில், உறுதியாகவே நிற்கிறது திமுக.  

 

Who owns ADMK? - Let's end the election!

 

பிரம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்த ‘உயர்ந்த பிரிவினர்’ என்று மனு ஸ்மிருதி குறிப்பிடுவதால், மற்ற அனைவரையும் தங்களுக்கு கீழானவர்களாகவே நடத்திய பிராமணர்களுக்கு எதிராக,  வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கையை வலியுறுத்தி,  பிராமணரல்லாதோருக்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே, நீதிக்கட்சி என்று அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம். நீதிக்கட்சியை சுயமரியாதை இயக்கத்தோடு இணைத்து, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக மாற்றியமைத்து, திராவிடர் கழகம் எனப் பெயரிட்டார் பெரியார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உருவானதுதான் திராவிட முன்னேற்ற கழகம். ஆக, சாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது திமுக. 

 

Who owns ADMK? - Let's end the election!

 

திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலையோ, அதன் கொள்கைகளோ(?), காலப்போக்கில்  மாற்றம் கண்டுவிட்டதால், குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பிடியில் அக்கட்சியைக்  கொண்டுவர,  ‘ஒற்றுமையான வாக்களிப்பே பலனளிக்கும்’ என இத்தேர்தலில், தமிழகம் முழுவதும் பரவலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

 

அதிமுகவுக்கு இப்படியொரு நிலைமை ஏன் வந்ததென்றால், ‘அக்கட்சியின் அம்சமே அப்படித்தான்!’ எனச் சொல்லும்படியாக இருக்கிறது. ஏன் தெரியுமா? 

 

தொடரும்..

 

  

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.