Skip to main content

யார் கொடுத்த காசுக்கு வோட்டு? கர்நாடகா வாக்காளர்கள் இன்று முடிவு!

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
karnataka


தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் வாக்காளர்களை விலைக்கு வாங்குவதாக பாஜகவினர் புலம்பித் தீர்ப்பதே வாடிக்கை. ஆனால், பாஜக வலுவான மாநிலங்களில் அவர்கள் அள்ளி இறைக்கும் பணத்துக்கு அளவில்லை என்பதை சமீபத்திய தேர்தல்கள் நிரூபித்தன.

திரிபுரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியையே விலைக்கு வாங்கி, பாஜக என்று பெயர் மாற்றியது சிரிப்பாய் சிரித்த விவகாரம். அதுபோக, வடகிழக்கு மாநிலங்களில் 2 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது எப்படி என்ற கதையெல்லாம் வெளியாகியது.

இதோ, கர்நாடகாவில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் பாஜக பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது. நேற்று இரவு மாநிலத்தின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளன.
 

Karnataka


ஆனால், பணத்தையும் மீறி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்கெனவே தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் பாஜக மீது பயங்கர வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அள்ளிவிட்ட பொய்கள் அனைத்தும் விவரமறிந்த வாக்காளர்களிடம் அவரை ஒரு கோமாளியாக்கி இருக்கின்றன என்கிறார்கள்.

இதற்கிடையே, கர்நாடகாவில் வாழும் தெலுங்கர்கள் மத்தியில் ஆந்திரா தொலைக்காட்சி சேனல்களில் பகிரங்கமாகவே பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்திருக்கிறது. வாட்ஸாப்புகளிலும் பாஜக எதிர்பபு பரவியிருக்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுப்பதாக கூறி ஏமாற்றிய பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று அந்த பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

எனவே, பணத்தை வாங்கிக் கொண்டு யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் தீர்மானித்து விட்டார்களா? யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் அரசியல்கட்சிகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

Next Story

"பாஜகவுக்கு எதிரான அலை" - சரத் பவார் 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

nationalist congress cheif Sharad Pawar says anti bjp wave is sweeping

 

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவானது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

 

மேலும் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதால் நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதை சொல்வதற்கு ஜோதிடர் தேவை இல்லை. கர்நாடக தோல்வியை தொடர்ந்து மத்தியில் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தும் திட்டம் குறித்து குழப்பி கொள்ள வாய்ப்பில்லை " எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சட்டமன்றத்தில் தோல்வி; நாடாளுமன்றத்தில் கூட்டணி? - தேவகவுடா பதில்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

assembly election loss parliamentary election alliance devegowda answer 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே எடியூரப்பா தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார்.

 

சுமார் ஒரு ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்ற நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவானது  எடியூரப்பா தலைமையிலும், அவரைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தலைமையிலும் ஆட்சி அமைத்து பாஜக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது.

 

மேலும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் அம்மாநிலம் உட்பட இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா, பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்து வருவதாகச் சில கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதனை நம்பாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று சொல்லி வருகின்றனர். நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி ஏதாவது உண்டு என்றால் தைரியமாக சொல்லட்டும் பார்க்கலாம். அதன் பின்னர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேசலாம்" என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் உடன் இருந்தார்.