Skip to main content

என்னது இந்தியாவோட முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனா!!! அப்போ அவர் யாரு?

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நிதியமைச்சராக உள்ளார். இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.
 

indira gandhi nirmala seetharaman



இதில் ஏராளமானோர் தமிழக பாஜகவினர். இதை நம்பி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான தமிழருக்கு வாழ்த்துகள் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் இவையனைத்தும் பொய். 

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் இந்திராகாந்தி, 1970 முதல் 1971 வரை அவர் அப்பதவியில் இருந்தார். வறுமையை ஒழிப்போம் என சூளுரைக்கொண்ட இந்திரா அரசில்தான் இந்தியாவிலிருந்த 14 வணிகரீதியிலான வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன. அந்த 14 வங்கிகளும் முதன்மையான வங்கிகள்.

இந்திரா கொண்டுவந்த வறுமை ஒழிப்பு திட்டங்கள் இந்தியா எங்கும் பரவியது. அந்த தேர்தலில்கூட இந்திரா தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார், ‘நான் வறுமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறேன், எதிர்கட்சியினர் என்னை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்படியாக பல வரலாறுகளைக்கொண்டது அவரது அந்த பதவிக்காலம். ஆனால் இப்போது நிர்மலாதான் முதல் நிதியமைச்சர் என்றும் கூறுகின்றனர். 

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் நிர்மலா சென்றமுறை பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போதும் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பலர் கூறினர். ஆனால் 1975 களிலும், 1980 முதல் 1982 வரையிலும் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் அதே இந்திராகாந்திதான். 

 

 

 

Next Story

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Income tax notice to Congress, Communist Party of India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Income tax notice to Congress, Communist Party of India

இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.