Skip to main content

அனைத்திலும் முதன்மை - யார் இந்த பாத்திமா பீவி?

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Who is Fatima Beavi?

 

ஆசிய நாடுகளிலேயே உச்சநீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு வகித்த முதல் பெண், இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி, தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான பார் கவுன்சிலில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண். இத்தனை பெருமைகளையும் கொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாத்திமா பீவி உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (23.11.23) காலமானார். 

 

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம், இன்றைய கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் ராவுத்தர் சமூகத்தைச் சேர்ந்த அன்னவீட்டில் மீரா சாஹிப், கதீஜா பீவி எனும் தம்பதியருக்கு 1927ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி பிறந்தவர் பாத்திமா பீவி. இவரது தந்தை அன்னவீட்டில் மீரா சாஹிப் அரசுப் பணியில் இருந்தவர். சிறு வயது முதலே படிப்பில் ஆர்வமாக இருந்த பாத்திமா பீவி, தனது சொந்த ஊரான பத்தனம்திட்டா பகுதியில் இருக்கும் கத்தோலிகேட் உயர்நிலைப் பள்ளியில் அவரது பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு பத்தனம்திட்டாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தாண்டியுள்ள திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் அறிவியல் இளங்கலை படிப்பை மேற்கொண்டார்.  

 

Who is Fatima Beavi?

 

இந்தச் சமயத்தில் இந்தியாவின் முதல் பெண் நீதிபதியான அன்னா சாண்டி திருவனந்தபுரத்தில் நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைக் குறித்து கேள்வியுற்ற மீரா சாஹிப், இதனை பாத்திமா பீவியிடம் சொல்ல, அதில் ஆவல்கொண்டு பாத்திமா பீவி அன்னா சாண்டியைச் சந்தித்தார். பிறகு அவரது வாழ்க்கை அறிவியல் துறையில் இருந்து நீதித் துறைக்கு மாறியது. அன்னா சாண்டி எனும் இந்தியாவின் முதல் பெண் நீதிபதியும், மகளின் கல்வியை ஊக்குவித்த மீரா சாஹிப்பும் இல்லை என்றால் இன்று நாம் ஆசிய நாடுகளின் உச்சநீதிமன்றத்தில் தலைமை பொறுப்பு வகித்த முதல் பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் எனும் பெருமையைப் பெற்றிருக்க முடியாது. அதுமட்டுமின்றி உயர் கல்வியை நோக்கியும், கல்வியை நோக்கியும் பெண்கள் பலர் நகர்ந்திருக்க வாய்ப்பில்லாமலும் இருந்திருக்கலாம். 

 

அன்னா சாண்டியால் அறிவியலைவிட்டு நீதித்துறைக்கு தடம் மாறிய பாத்திமா பீவி, திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1950ம் ஆண்டு சட்டக் கல்வியை முடித்தார். பிறகு திருவிதாங்கூர் சமஸ்தான பார் கவுன்சில் தேர்வை எழுதிய பாத்திமா பீவி, அந்த சமஸ்தானத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதல் மதிப்பெண் பெற்ற பெண் என்ற வரலாற்றைப் படைத்தார். 

 

Who is Fatima Beavi?

 

பார் கவுன்சிலில் முதல் மதிப்பெண் பெற்ற பாத்திமா பீவி, தொடர்ந்து வழக்கறிஞராக செயல்பட்டு பிறகு துணை நீதிபதியாக தனது பணியைத் துவங்கி பதவி உயர்வுகளைப் பெற்று 1983ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து 1989ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் பாத்திமா பீவி. இதன் மூலம், இந்தியாவிலும், ஆசிய நாடுகளிலும் உச்சநீதிமன்றத்தின் தலைமை பொறுப்புக்கு வந்த முதல் பெண் என்ற வரலாற்றில் இடம் பிடித்தார் பாத்திமா பீவி. 1989 முதல் 1992 வரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பாத்திமா பீவி, 1997ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

 

1997 முதல் 2001ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகச் செயல்பட்ட பாத்திமா பீவி, 2001ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, போட்டியிடாத ஜெயலலிதாவை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமித்தார். இதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக, வழக்கால் தேர்தலிலேயே ஆறு வருடங்கள் போட்டியிட முடியாத ஜெயலலிதாவை எப்படி முதலமைச்சராக்கலாம் எனும் கேள்வி எழுந்தது. பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்று அங்கு ஜெயலலிதா நியமனம் செய்தது செல்லாது என தீர்ப்பு வந்தது. இடைக்கால முதல்வராக ஓ.பி.எஸ். செயல்பட்டார். பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, 2002ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சரானார். 

 

1998ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பின்போது ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, மாநிலத்தில் அமைதி நிலவிட அரசுடன் இணைந்து தீவிரமாக உதவினார். 

 

 

Who is Fatima Beavi?

 

இந்த விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய பாத்திமா பீவி, தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு திருவனந்தபுரத்தில் வசித்து வந்த பாத்திமா பீவி இன்று (23.11.23) உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்தினார். 

 

ஆளுநர் பதவிக் காலத்தில் சர்ச்சைகள் எழுந்தாலும், பாத்திமா பீவி எனும் இஸ்லாமிய பெண் இல்லையென்றால் ஆசிய நாடுகளின் உச்சநீதிமன்றத்தில் தலைமை பொறுப்பு வகித்த முதல் பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் எனும் பெருமையை நாம் பெற்றிருக்க முடியாது. அதுமட்டுமின்றி உயர் கல்வியை நோக்கியும், கல்வியை நோக்கியும் பெண்கள் பலர் நகர்ந்திருக்க வாய்ப்பில்லாமலும் இருந்திருக்கும். 

 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.