Skip to main content

கரோனாவின் காதலி யார்? மொத்தம் 10 கேள்வி: தவறாக பதில் அளித்தால்... (படங்கள்)

Published on 27/03/2020 | Edited on 27/03/2020
Who is Corona's girlfriend?Who is Corona's girlfriend?

                                                     கேள்விக்கான பதிலை எழுதுகிறார்கள்...


கரோனாவை தடுக்க நாடு முமுவதும் ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வதாக கூறி மக்கள் இருசக்கர வாகனங்களில் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் வீடுகளுக்கு சுற்றி திரிகிறார்கள். இதை பாதுகாப்புக்கு நிற்கும் போலிசார் கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் டூவீலரில் ரவுண்ட் அடிக்கிறார்கள்.

 

Who is Corona's girlfriend?

                                                     பதிலை திருத்தும் போலீஸ்


இதனால் இதை நூதன முறையில் கட்டுப்படுத்த குமரி மாவட்டம் தக்கலை சரக டிஎஸ்பி ராமசந்திரன் மார்த்தாண்டத்தில் டூவிலரில் அதுவும் அத்தியாவசிய காரணமின்றி செல்பவா்களை பிடித்து உட்கார வைத்து கரோனா சம்மந்தமான கேள்வி தாள்களை கொடுத்து தோ்வு எழுதுவது போல் எழுத வைத்தார்.


 

Who is Corona's girlfriend?

 

Who is Corona's girlfriend?


                                                   திருத்தப்பட்ட வினாத்தாளும், மதிப்பெண்ணும்...


அந்த கேள்வி தாளில் கரோனாவின் காதலி யார்? கரோனா வைரஸ் முதலில் உருவான நாடு எது? அதை தடுக்க நாம் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா முதலில் உடலில் உள்ள எந்த உறுப்பை தாக்கும் என 10 கேள்விகள் உள்ளன.

 

Who is Corona's girlfriend?

 

                           தவறான பதில் அளித்த ஒவ்வொன்றுக்கும் 10 தோப்புக்கரணங்கள் 


தவறான விடையளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 10 தோப்புகரணங்கள் போட வைத்ததோடு கரோனாவை ஒழிப்பது சம்மந்தமான உறுதிமொழி மற்றும் ஊரடங்கு உத்தரவை கடை பிடிப்பது சம்மந்தமான உறுதி மொழியையும் எடுக்க வைத்த பின்பு டிஎஸ்பி ராமசந்திரன் அன்போடு எச்சரித்து அவா்களை அனுப்பி வைத்தார்.
 

Who is Corona's girlfriend?

 

இப்படி நேற்று மார்த்தாண்டத்தில் மட்டும் 100 பேரை தோ்வு எழுத வைத்து நூதன முறையில் தண்டனையும் கொடுத்த டிஎஸ்பி யின் நடவடிக்கையை பலா் பாராட்டுகின்றனா்.
 

 

 


                                      

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.