Skip to main content

"இன்னொரு பாலசந்தராக ஆகக் கூடியவர்" - நடிகர் கமல்ஹாசன் பேச்சு

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

"Who can be another Balachander"- actor Kamal Haasan talks!

 

மறைந்த நடிகரும், வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனின் 70- வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன்... "உங்களுக்கு நல்ல நண்பர்களும், வாத்தியார்களும் கிடைத்துவிட்டால் எல்லாம் வந்து சேரும். நாங்கள் குரோம்பேட்டைக்கு போகும்போது எங்கள் முகத்தில் சிறிய புன்னகை இருக்கும். ஏனென்றால் ஸ்பான்ஸ் பவுடர் வாசனை வரும். அப்போது, மௌலி சார் ஞாபகம் வரும். அவர் செய்த காமெடி ஞாபகம் வரும். ரமணன் சாரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பாலசந்தர்  சார் ஞாபகம் வரும். 

 

அந்த காலத்திலிருந்து இவர்களின் நாடகத்தைப் பார்ப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். பல நாடகங்களை இந்த மேடையில் பார்த்திருக்கிறேன். இதே மேடையில் சண்முகம் அண்ணாச்சி சொல்லிக் கொடுத்து நான் நடித்திருக்கிறேன். இது மிக முக்கியமான அரங்கம். இதில் வெவ்வேறு விதமான திறமையாளர்கள் உருவாகி வந்துள்ளனர். அதில் மௌலி போன்றவர்கள் பன்முக திறமையைக் கொண்டவர்கள். மௌலி காமெடி ரைட்டர் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. காரணம், நான் எப்படி காமெடி நடிகர் என்று கூறினால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ, அதேபோல் மௌலி இன்னொரு பாலசந்தராக ஆகக் கூடியவர் என்று நாங்கள் எல்லாம் நம்பினோம். ஏன் பாலசந்தரே நம்பினார் என்பதுதான் உண்மை. 

 

தன் படத்தின் ஒரு பகுதியை நீங்கள் எழுதுங்கள் என்று மௌலியை நம்பி பாலசந்தர் கொடுப்பார். அதன் பிறகு, இந்தக் காட்சியை நீங்கள் எடுத்து விடுங்கள் என்று கூறி என்னிடம் கொடுத்துவிட்டு போனார். நாங்கள் எல்லோரும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 'நான் ஒரு தனிமரம்' என்கிற நாடகத்துக்கு என்னை தயார் செய்திருந்தார் மௌலி சார். நான் அப்போது, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், வீட்டிற்கு தூங்குவதற்கு கூட வரமாட்டேன். ஸ்டூடியோவிலேயே தூங்குவேன். எனக்கு என்ன பெருமை என்றால் என்னுடைய வேஷம் நாகேஷுக்கு சென்றதுதான். 

 

நான், மோகன், நாகேஷ் ஆகியோர் அமர்ந்திருந்தோம் என்றால், நாங்கள் மட்டும் சிரித்துக் கொண்டிருப்போம். பாதி காமெடிகள் வெளியில் சொல்ல முடியாது. ரொம்ப சங்கோஜமான காமெடி எல்லாம் அடித்திருக்கிறோம். 'பம்மல் கே சம்பந்தம்' வெறும் காமெடி படம் மட்டுமல்ல. அந்தப் படத்தில், தாத்தாவிடம் புலம்பும்போது நீதானே, என்னை வளர்த்தாய் எனக் கூறும்போது, கிட்டத்தட்ட அது பாகப் பிரிவினை போன்ற காட்சியாக அமைந்துவிடும். 

 

மௌலிக்கு உண்மையாக பாராட்டு விழா நடத்தி பொன்னாடையோ, ஷீல்டையோ கொடுப்பது அல்ல; அந்த காமெடியைத் திருப்பிக் கூறுகிறேன் பாருங்கள்; அதுதான் என்னுடைய பாராட்டு விழா. பெரிய சாதனைகளை எனதாக்கிக் கொள்வதில் எனக்குப் பெருமை. மோகன் மாதிரி இன்னொரு மாடல் கிடையாது; அது எங்களுக்கே தெரியும். நாங்கள் காமெடி ரைட்டர்ஸ் எங்களுக்கு பொறாமை கிடையாது; அதை சிரித்துக்கொண்டே விட்டுவிடுவோம். இந்த மாதிரி நகைச்சுவை இந்தியாவிலேயே கிடையாது. 

 

எனக்குத் தெரிந்து இந்தியாவில் மோகன் எழுதிய நகைச்சுவை போல் எங்குமே இல்லை. நானும் இதுபோன்ற பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர்களே வியக்கிறார்கள். மோகன் நாடகத்தை யார் வேண்டுமானாலும் போடலாம் என்று., விஷயம் நீங்கள் பண்ண வேண்டும். நாம் பெருமையாக மார்தட்டிக் கொள்கிறோம். இந்த மாதிரியான நகைச்சுவை இந்தியாவில் கிடையாது என்று... அற்றுப்போய் விடாமல் இருப்பதற்கு நீங்கள் செய்யும் ஒரு விஷயம். அதற்காகத்தான் நான் இங்கு வருகிறேன்" எனத் தெரிவித்தார்.

 


 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.