Skip to main content

யார் இந்த பிர்ஸா முண்டா...? என்ன செய்தார்...?

Published on 20/11/2018 | Edited on 20/11/2018

நில அரசியலை, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேசிகொண்டிருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது பாலிவுட்டிலும் அதனை பேச பயணித்திருக்கிறார். பிர்ஸா முண்டா என்பவரின் வழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக எடுக்கப்போவதாக இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். அதே படத்தை தமிழில் அறம் படத்தின் இயக்குனர் கோப்பி நயினார் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பிர்ஸா முண்டா தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  அதிக அளவில் வலம்வந்துகொண்டிருக்கிறது. யார் இந்த பிர்ஸா முண்டா என்பதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.

 

bb

 

 

பிஹாரும் ஜார்கண்டும் ஒருங்கிணைந்திருந்த காலத்தில் 15 நவம்பர் 1875-ல் முண்டா எனும் பழங்குடி சமூகத்தில் எளிய, வறுவமையான குடும்பத்தில் பிறந்தவர் பிர்ஸா முண்டா. புஹண்டா எனும் காட்டு பகுதியில் ஆடு மேய்ப்பது மற்றும் சில சிறு வேலைகளை செய்வது என்று இவரின் இளமை காலம் இருந்தது. இவரின் இளமைப் பருவத்தில் கிறிஸ்துவம் மதத்தின் மீது பற்றுகொண்டு அந்த மதத்திற்கு மாறினார். பின் தான் பிறந்த முண்டா சமூகத்தைப் பற்றி தெரியவர, பழங்குடி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட அவர் தன்னை அதற்கான போராட்டத்தில் ஈடுபடுத்திகொண்டார். 

 

நிலப்பிரபத்துவர்கள் பழங்குடியினரின் நிலங்களையும் உடைமைகளையும் ஆக்ரமிப்பு செய்வதைக்கண்டு. அதை எதிர்த்து முதலில் பிர்ஸா முண்டா போராட்டம் நடத்தினார். அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினார். அதிகாரத்தை எதிர்த்து போராட அங்கிருக்கும் பழங்குடி மக்களை எல்லாம் ஒன்றிணைத்து நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராட தொடங்கினார். அவர் ஒருங்கிணைத்த போராட்ட குழுவிடம் ‘பொய் பேச கூடாது, மது அருந்த கூடாது, கடவுளுக்கு என்று உயிர் பலிகளை கொடுக்கக்கூடாது, பெரியவர்களை மதிக்கவேண்டும் மற்றும் உடலும், மனமும் தூய்மையாக இருக்க வேண்டும் போன்ற பண்புகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இவரின் தொடர் போராட்டங்களைக்கண்டு, பிரிட்டிஷ் அரசு அவர்களை கவனிக்கத் தொடங்கியது. மேலும் பிர்ஸாவின் செயல்பாடுகளையும் எதிர்த்து நிற்க தொடங்கியது. அதனால் 1895-ல் பிரிட்டிஷ் அரசால் பிர்ஸா கைது செய்யப்பட்டார். இவரின் கைதைக் கண்டித்து பிர்ஸாவின் படை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது.  1895-ல் கைது செய்யப்பட்ட பிர்ஸா முண்டா இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தார். அந்த இரண்டு வருடங்களும் பிரிட்டிஷாருக்கும் முண்டா பழங்குடி மக்களுக்கும் இடையில் பெரிய போராட்டங்கள் நடந்திருக்கிறது. 1897-ல் பிர்ஸா விடுதலையாகி வெளியேவந்தார். மீண்டும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், நிலத்திற்காகவும் தீவிரமாக போராட தொடங்கினார். அதன் காரணமாக 1900-ம் வருடம் பிப்ரவரி 3-ம் தேதி மீண்டும் சிறைப்படுகிறார் பிர்ஸா. இம்முறை சிறை சென்ற பிர்ஸா பிணமாகத்தான் வெளியுலகத்திற்கு வருகிறார். 1900 ஜூன் 9-ம் தேதி தனது 25-து வயதில் பிர்ஸா, காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்தார் என்று பிரிடிஷ் அரசு அறிவித்தது. 

 

bb

 

நிலப்பிரபுத்துவம், பிரிடிஷ் அரசு எதிர்ப்பு என தனது 20 வயதில் போராட்டத்தை தொடங்கிய பிர்ஸா முண்டா திருமணம் செய்துகொள்ளாமல். அதிகாரத்திற்கு எதிராக பழங்குடி மக்களின் விடுதலைக்காக போராட்டம் நடத்தி தனது 25 வயதில் மரணம் அடைந்தார். இவரின் போராட்டங்கள் எதுவும் இந்திய விடுதலை போராட்டம் என்ற அடிப்படையில் பேசப்படவில்லை. அதற்கு காரணம் அன்று, ஒருங்கிணைந்த நாடாக இந்தியா இல்லை. ஆனால் அதன் பின் வந்த நம் இந்திய விடுதலை போராட்ட தலைவர்களும் வீரர்களும் பிர்ஸாவை முன் உதாரணமாக எடுத்து பேசினர். அதன் பின் அவரின் செயல்பாடுகள் குறித்து பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது. 

 

பழங்குடியினரின் நிலத்தை யாரும் அவர்களிடம் இருந்து அபகரிக்கக்கூடாது என்று பிரிடிஷ் அரசை எதிர்த்தும், அதேபோல் பழங்குடியினருக்கும் சமூகத்தில் அனைத்துவிதமான உரிமைகளும் இருக்கிறது என்றும் பேசினார். இந்த இரண்டு இலக்குகள்தான் இவரின் போராட்டத்தில் முன்னின்றவை. இயக்குனர் பா. ரஞ்சித்தின் பட அறிவிப்பு வருவதற்கு முன்பே வட இந்தியாவில் பிர்ஸாவைப் பற்றியும் அவரின் போராட்டங்களைப் பற்றியும் மக்கள் மத்தியில் அறியப்பட்டது. ஆனால், இப்போது அவரின் வாழ்க்கை வரலாறு படமாக மாறும்போது பிர்ஸா முண்டா இந்தியா முழுக்க அறியப்படுவார். 

 

 

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.

Next Story

4 பெண் இயக்குநர்களின் ஆந்தாலஜி; இயக்குநர் பா. ரஞ்சித் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 4 An Anthology of Women Directors; Director pa Ranjith First Look Released

 

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாகத் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் நான்கு பெண்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

 

பெண்களின் மாறுபட்ட கதைகளைக் கொண்டாட, நான்கு பெண் இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்திற்கு ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இதன் இயக்குநர்களாக அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகியோர் உள்ளனர். மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.