Skip to main content

எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும்? - தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்! #3 

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

Which party will win and rule in how many constituencies? - Tamil Nadu politics and astrology

 

‘மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு இந்த (2016) தேர்தலில் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று அந்த ஜோதிடரைக் கேட்டார் ஜெயலலிதா. ‘இந்தியத் தேர்தல் வரலாற்றில், எந்த மாநிலத்திலும், எந்தவொரு பிரதான கட்சியும், அத்தனை தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டதில்லை. அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும். இது மட்டும் நடந்துவிட்டால், 2016-லும் நீங்களே முதலமைச்சர். ஜோதிட கணிப்பின்படியே இதை நான் சொல்கிறேன்’ என்று ஜோதிடர் கூற, மறுப்பேதும் சொல்லாமல், அந்த ஆலோசனையைக் கேட்டதோடு, செயல்படுத்தவும் முனைந்தார். 

 

ஜோதிட நம்பிக்கையை மனதில் நிறுத்தியபடி, ஜெயலலிதா மிகச்சரியாக காய் நகர்த்தியதில், தேமுதிக, மதிமுக,  விடுதலைச் சிறுத்தைகள்,  இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள், மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் தனியாக ஒரு அரசியல் கூட்டணி அமைத்தன. அதிமுக தலைமையான ஜெயலலிதாவோ,  மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய குடியரசு கட்சி, கொங்கு பேரவை கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளில், அத்தனை வேட்பாளர்களையும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு, 28 ஆண்டுகள் கழித்து, அதிமுகவின் தொடர் வெற்றி.. தொடர் ஆட்சி என்பது, ஜெயலலிதா தலைமையில் 2016ல் முதல் முறையாக அமைந்தது.

Which party will win and rule in how many constituencies? - Tamil Nadu politics and astrology

ஜெயலலிதா இறக்கும் வரையிலும், ஜோதிட ஆலோசகராக அந்த ஜோதிடர் மட்டுமே இருந்தார். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் சசிகலா. இந்த 2021 தேர்தல் முடிவுகளை, ஜோதிட ரீதியாக அறிந்ததனாலேயே, அரசியலில் இருந்து, அவர் தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறார்.

 

Which party will win and rule in how many constituencies? - Tamil Nadu politics and astrology

 

கரன்ஸி கணக்கால் கசந்துபோன அரசியல் கணக்கொன்றும் இருக்கிறது. அந்த ‘தாய்’ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, ‘சிறிய’ தாயைப் பார்ப்பதற்காக, சாமியானவரும் மணியானவரும் தினமும் அந்த மருத்துவமனைக்கு வந்தார்கள்; காலில் விழுந்து ஆலோசனை பெற்றார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், இருப்பு வைத்திருந்த கோடானு கோடிகளெல்லாம் செல்லாத நோட்டுகள் ஆகிவிட, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ஒவ்வொன்றிலும், இருநூறுக்கும் மேற்பட்ட கணக்குகளை முன் தேதியிட்டு ஆரம்பித்து, அனைத்தையும் மாற்றினார்கள். அந்தப் பணமெல்லாம் ‘சாமி’ வசம் இருந்ததாலேயே, அவர் ‘முதல்’ இடத்துக்கு கொண்டுவரப்பட்டார். துரோகமிழைத்து, தற்போது வரையிலும் உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அவருடைய ஜாதகப்படி, இந்த நிலை நீடிக்காது.

 

‘பெரியவங்க’ தன்னுடைய எதிர்காலத்தை மட்டுமே தெரிந்துகொள்ள, ஜோதிடம் பார்ப்பவரல்ல. ஒருதடவை, அந்த ‘ஸ்டார்’ ஜாதகத்தைக் காண்பித்து, ‘இது எப்படியிருக்கு?’ என்று கேட்டுள்ளார். ‘திருவோண நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னம் இவருடையது. தன்னுடைய வாழ்க்கையில், அரசியல் கட்சி என்று இவர் ஆரம்பித்தால், உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஜோதிட நம்பிக்கை மிகுந்துள்ள இவர், நிச்சயம் கட்சி தொடங்குவதற்கான வாய்ப்பே இல்லை’ என்று அப்போது கணித்துச் சொல்லப்பட்டுள்ளது.

 

அதே பெரியவங்க, 2016, மார்ச் 1-ஆம் தேதி, இன்னொரு ஜாதகத்துக்கு ‘பலன்’ கேட்டுள்ளார். ‘பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னம் இவருடையது. சனி மஹா திசையில், புதன் புத்தி நடக்கும்  03-02-2021 முதல் 12-10-2023 வரையிலான காலக்கட்டம் நன்றாக உள்ளது. அப்போது, இவர் முதல் இடத்துக்கு வருவார்’ என்று கணித்துச் சொல்லப்பட்டதும், ‘அதுவரையில் நான் இருக்கப்போவதில்லை’ என, தனது ஆயுள் காலத்தை தெரிந்தவராக, ‘பளிச்’ என்று சிரித்துள்ளார்.

 

‘தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்..’ எனக் கட்டுரையின் தலைப்பே அமைந்துவிட்டபோது, சட்டமன்றத்துக்கான தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில், ‘பலம் உள்ள இரு கட்சிகளின் ‘பலன்’ என்னவென்று துல்லியமாகச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டோம், அந்த ஜோதிடரிடம். ‘ஒரு கட்சி உருவானது மகர ராசியில். இன்னொரு கட்சி உருவானது மிதுன ராசியில். மகர ராசிக்கு ஏழரை சனி ஜென்ம குரு. மிதுன ராசிக்கு அட்டமத்து சனி, அட்டமத்து குரு. ஆனால், தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி, குரு அதிசாரத்தில், அதிகாலை 1 மணிக்கு கும்பத்துக்கு வந்துவிடுகிறார். மிதுன ராசி கட்சிக்கு 9-ஆம் இடத்துக்கு குரு வந்துவிடுகிறார். மகர ராசி கட்சிக்கோ, 2-ஆம் இடத்துக்கு குரு வருகிறார். இரண்டாமிடம் பெரிதா? ஒன்பதாவது இடம் பெரிதா? இதிலென்ன சந்தேகம்? ஒன்பதாவது இடம்தான். இன்னும் நிறைய சொல்லலாம். ஜோதிட வார்த்தைகளை எல்லாரும் புரிந்துகொள்ள முடியாது.’ என்று அவர் ‘பிரேக்’ விட, ‘வெற்றி பெறும் கட்சிக்கு கிடைக்கும் இடங்கள் எத்தனை என்று கணித்துள்ளீர்களா?’ எனக் கேட்டோம். ‘மிதுன ராசி கட்சி 165-லிருந்து 175 இடங்களில் வெற்றிவாகை சூடும்’ என்று அடித்துச் சொன்னார், தனது ஜோதிட கணிப்பின் மீதான அசைக்க முடியாத  நம்பிக்கையில். 

 

ஜாதகக் கட்டம், ஜோதிட கணிப்பெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்! வாக்காளர்கள் போடும் கணக்கென்னவோ?

 

தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா ‘என்னென்ன’ செய்தார்? - தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்! #2 

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.