ஊடகங்கள் மீதான வழக்குகள் ரத்து: "எந்தெந்த வழக்குகளுக்கு பொருந்தும்..?" - அரசு குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம்

which cases on media houses will be dismissed under tn govt order

திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் மீது கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து, அதற்கான உத்தரவை தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.07.2021) பிறப்பித்திருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், "2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள்‌ தி இந்துநாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌, டைம்ஸ்‌ ஆஃப்‌ இந்தியாநாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 5 வழக்குகளும்‌, எக்கனாமிக்‌ டைம்ஸ்‌நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 1 வழக்கும்‌, தினமலர்‌நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 12 வழக்குகளும்‌, ஆனந்த விகடன்‌வார இதழின்‌ ஆசிரியர்‌ மீது 9 வழக்குகளும்‌,ஜுனியர்‌ விகடன்‌இதழின்‌ ஆசிரியர்‌ மீது 11 வழக்குகளும்‌,நக்கீரன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 23 வழக்குகளும்‌ முரசொலிநாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 17 வழக்குகளும்‌ தினகரன்‌நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌ போடப்பட்டிருந்தன. மேலும்‌,புதிய தலைமுறைதொலைக்காட்சி, நியூஸ்‌ 7 தொலைக்காட்சி, சத்யம்‌தொலைக்காட்சி, கேப்டன்‌தொலைக்காட்‌சி, என்‌.டி. டி.வி தொலைக்காட்சி, டைம்ஸ்‌ நவ்தொலைக்காட்சி மற்றும்‌ கலைஞர்‌ தொலைக்காட்சி ஆகியவற்றின்‌ ஆசிரியர்கள்‌ மீது தலா ஒரு வழக்கு வீதம்‌ 7 அவதூறு வழக்குகள்‌ போடப்பட்டிருந்தன.

திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ “பத்திரிகையாளர்கள்‌ மீது பழிவாங்கும்‌ நோக்கத்தில்‌ போடப்பட்ட அவதூறு வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, பத்திரிகையாளர்கள்‌ மீது போடப்பட்ட 90 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று ஆணையிட்டுள்ளார்கள்‌'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

damodharan

இந்நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பால் எந்தெந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆ. தாமோதரனிடம் கேட்டபோது, "தமிழக அரசின் உத்தரவின் பேரில் தொடரப்படும் அவதூறு வழக்குகள் முதற்கட்டமாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நகரஅரசு குற்றவியல்வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்படும். அந்த வழக்குகள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும்... 'அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றுசில பத்திரிகைகள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிதடை கேட்கும் அல்லது வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை விடுக்கும்.

சென்னை உயர் நீதிமன்றம் வழக்கிற்குத்தடை விதித்தாலும், ரத்து செய்தாலும் கடந்தகால அரசு அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டதன் மூலம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட வழக்குகள், அதுதொடர்பாக கடந்த அரசு மேல்முறையீடு செய்ய இருந்த வழக்குகள் என அனைத்து வழக்குகளுக்குமே இந்த உத்தரவு பொருந்துவதால் அவை அனைத்தும் ரத்தாகும்" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

admk media mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe