Skip to main content

அரசியல் காரணம் தவிர்த்து பெட்ரோல், டீசல் விலை உயர காரணம் என்ன???

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

பெட்ரோல் விலை இனி தினமும் மாற்றியமைக்கப்படும் 2017 ஜூனில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா தேர்தலின்போது மட்டும் எந்த மாற்றமுமில்லாமல் இருந்தது, அதன்பின் 15 நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அரசியல் காரணம் ஆயிரம் உண்டு. எனினும் நாம் இப்போது அரசியல் காரணங்களை விடுத்து மற்ற எந்தெந்த காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலை உயரும் என்பதைப் பார்ப்போம்.

 

petrol


 

 

 

கச்சா எண்ணெய் விலை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டால்  அது நேரடியாக விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெட்ரோலின் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக இருப்பது கச்சா எண்ணெய் விலைதான். சர்வதேச அளவில் பெட்ரோலின் தேவை அதிகரிக்கும்போதும், குறைவான உற்பத்தியின்போதும், விலை உயரும்.

 

அரசியல் காரணிகள்:
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டிற்கும், கொள்முதல் செய்யும் நாட்டிற்குமிடையே அரசியல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது உலகம் முழுவதிலும் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு சிறு மாற்றத்தை கொண்டுவரும்.

 

 

 

தேவை அதிகரிப்பு:
தற்போதைய இந்தியாவின் நிலை பெட்ரோல் மற்றும் ஏனைய எரிபொருள்கள் தேவையை அதிகரிக்க செய்கிறது. எடுத்துக்காட்டாக சொந்தமாக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் பெட்ரோல் தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற தேவைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. ஒரு பொருள் தேவை இன்றியமையாததாக மாறிவிட்டால், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் மக்கள் அதனை வாங்க முற்படுவர். அதுவும் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைகிறது.

 

சரியான விநியோகம் செய்யாதது மற்றும் தேவை:
கச்சா எண்ணெய்யின் விலையால் இந்தியாவின் முழு தேவைக்குமான எண்ணெயை, எண்ணெய் நிறுவனங்களால் வாங்க இயலாது. அதனாலும் இங்கு ஒரு பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கும் இதுவும் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது இல்லாமல், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும், சந்தை நிறுவனங்களும் கச்சா எண்ணெய்யை 6 வாரங்களுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களை இருப்பு வைத்திருக்கும், இதுவும் பெட்ரோல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

 

 

வரி:
மாநில அரசாங்கத்தின் வரிகளால் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோலிய பொருட்களின் விலை மாறுபடும். இந்திய அரசாங்கம் எப்பொழுது அதிக வரியை பெட்ரோலியத்துக்கு நிர்ணயித்ததோ, அப்பொழுதே நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காகவும், இழப்பை சரி செய்யவும் விலையை உயர்த்த தொடங்கிவிட்டன.

 

ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றம்:
டாலருக்கு நிகரான இந்திய மதிப்பில் ஏற்படும் மாற்றம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

போக்குவரத்து செலவுகள்:
அந்தந்த ஊர்களுக்கு பெட்ரோலிய பொருட்களை கொண்டுவர ஆகும் செலவுகளும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.    

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.