Skip to main content

அபிநந்தன் இனி சந்திக்கவிருக்கும் சோதனைகள்...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019
abinandhan


பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன், நேற்று மாலை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 
 

வாகா எல்லையை அபிநந்தன் தாண்டிய பின், வான்படை துணை மார்ஷியல் ஆர்ஜிகே கபூர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “விங் கமாண்டர் அபிநந்தன் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். விமானப்படையின் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளின் படி முதலில் அபிநந்தனை பூரண மருத்துவ சோதனைக்கு உட்படுத்த அழைத்து செல்கிறோம். வானில் பறந்துகொண்டிருக்கும்போது விமானத்தில் இருந்து வெளியேறியவருக்கு இது கட்டாயமானது. விமானத்திலிருந்து வெளியேறியதால் அவரது உடலுக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும்” என்றார்.
 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அபிநந்தன் மிக்-21 பைசன் போர் விமானத்தில் சென்றபோது, பாக் போர் விமானம் எஃப்-16 மீது மோதியதால், அது பழுதடைந்தது. இதனால் வானில் பயணிக்கும்போதே பாராசூட்டை பயன்படுத்தி கீழ் இறங்கிவிட்டார் அபிநந்தன். பாக் எல்லைக்குள் அவர் விழுந்துவிட்டதால், பாக் ராணுவம் அவரை பிடித்தது.
 

தற்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில், அவர் எப்போது சாதாரணமான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவார். என்ன மாதிரியான நெறிமுறைகளை அவர் சந்திக்க நெறிடும் என்பது குறித்து முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் சிலர் ஆங்கில நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியின் மூலம் பார்ப்போம்.
 

மானோஜ் ஜோஷி என்னும் மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி அளித்த பேட்டியில், போர் கைதிகள் முகாமுக்கு சென்று வந்தவர்களிடம் மூன்று வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அது என்ன என்றால்.
 

  • பாகிஸ்தானிடம் எதேனும் முக்கியமான விஷயத்தை பற்றி பகிர்ந்தாரா என்று அவரிடம் விசாரணைகள் நடத்தப்படும்.
     
  • பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது அவரை மூளை சலவை செய்திருக்கிறார்களா என்று புலனாய்வு அமைப்பினரை வைத்து கேள்விகள் கேட்கப்படலாம்.
     
  • அவர் உடம்பில் எங்காவது பக் பொறுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்யப்படும். மயக்க நிலையில் அவர் இருந்தபோது என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம் என்று ஜோஷி தெரிவிக்கிறார்.
     
  • உடல் வலிமை சோதனை கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.
     

“விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் தங்களின் வீரர்களை ரா போன்ற புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்து கேள்விகள் கேட்பதில்லை. ஆனால், அபிநந்தன் கேஸ் முற்றிலும் வேறுபட்டது என்பதால் ரா போன்ற அமைப்பால்தான் விசாரிக்கப்படுவார். இந்தியாவின் பாதுகாப்பிற்காக அபிநந்தன் என்னும் தைரியமானவர் போராடி, அவர்களிடம் சிக்கிக்கொண்டார். இது கொஞ்சம் மோசமான ஒன்றுதான். ஆனால், என்ன செய்வது அவரை விசாரிக்க வேண்டும் அது கட்டாயமானது” என்று முன்னாள் லியுடெனண்ட் ஜெனரல் ஹெச்.எஸ் பாசங் ஒரு ஆங்கில பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Tamil Nadu Chief Minister congratulates Abhinandan on receiving Veer Chakra award

 

2019- ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இராணுவ விமானங்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றன. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். அதேநேரத்தில் பாகிஸ்தானின் எஃப் 16 விமானம் நடத்திய பதில் தாக்குதலினால் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையில் குதித்த அவரை பாகிஸ்தான் சிறைபிடித்தது. அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் பின்னர் அபிநந்தனுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

 

இந்தநிலையில், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது இன்று (22/11/2021) வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கினார்.

 

இந்நிலையில், வீர் சக்ரா விருதை பெற்ற அபிநந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்' என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்து தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் வீர் சக்ரா விருது பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

"ராணுவத் தளபதிக்குக் கால்கள் நடுங்கிவிட்டன" - அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எதிர்க்கட்சித் தலைவர்...

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

pakistan leader about abinandhan release

 

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்டபோது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சர்தார் அர்யாஸ் சித்திக் நினைவுகூர்ந்துள்ளார். 

 

பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அபிநந்தன் பாகிஸ்தானுக்குள் நுழைந்த சம்பவம் குறித்துப் பேசியுள்ள சர்தார் அர்யாஸ் சித்திக், "எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இந்திய விங் கமாண்டர் அபிநந்தனைப் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து வைத்திருந்தது. அவரை விடுவிக்க இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதுகுறித்து முடிவு எடுக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொள்ளவில்லை. நான் பங்கேற்றேன். என்னுடன் சேர்ந்து பல்வேறு அமைச்சர்கள், ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 

அந்தக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய வீரர் அபிநந்தனை நாம் விடுவிக்காவிட்டால், இந்தியா நிச்சயம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும். அதுவும் இன்று இரவு 9 மணிக்கே இந்தியா போர் தொடுக்கலாம். எனவே அபிநந்தனை விடுவிப்பதுதான் சிறந்தது” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வாவின் கால்கள் பயத்தால் நடுங்கின, முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது" எனத் தெரிவித்தார். பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பேச்சு தற்போது இந்தியாவில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.