Skip to main content

இப்போது தேவைப்படுவது வெறுப்பு அரசியல் அல்ல, நெருப்பு அரசியல் - சகாயம் அதிரடி பேச்சு

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
m.,

 

சமீபத்தில் ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் அவர்கள் பொங்கலை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்முறையாக அதிரடி அரசியல் கருத்துக்களை பேசினார். அவரின் கருத்துக்கள் வருமாறு, " தமிழர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள், நன்றியுணர்வு அதிகம் கொண்டவர்கள். அந்த வரிசையில் நாமும் அவர்களில் ஒருவர் என்பது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. தமிழர்கள் நன்றியுணர்ச்சி கூடியவர்களாகவே எப்போதும் இருந்து வருகிறார்கள். யாரெல்லாம் இந்த மக்கள் பாதை அமைப்புக்கு வலுசேர்க்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கெல்லாம் யார் உறவு என்று பார்த்தால் இவர்களை போன்ற கிராமத்து மக்கள்தான் நமக்கு உறவு. எங்களுக்கு உறவு பணக்காரர்கள் அல்ல, கார்ப்பரேட்டுகள் அல்ல, அவர்களை எல்லாம் என்னுடைய உறவாக வைத்திருந்தால் நான் ஏன் ஐஏஎஸ் பணியில் இருந்து விலகி இருக்க போகிறேன். எனவே என்னுடைய உறவுகள் எல்லாம் எம்தமிழ் நிலத்தின் ஏழை எளிய மக்கள். எங்களுக்கு உண்பதற்கு சோறுபோடும் மக்கள். நம் ஒவ்வொருவருக்கும் உணவு அளிப்பவர்கள் விவசாயிகள். நாம் நன்றியோடு இருக்க வேண்டியவர்கள் என்றால் நம்முடைய தாய் தகப்பனுக்கு அடுத்த படியாக நம்முடைய விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். அதை நாம் மறந்து செயல்பட்டால் நாம் வாழ்வதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். 

 

நாம் உயிர்வாழ காரணமாக இருக்க கூடிய அந்த விவசாயிகள் இன்றைக்கு மரணத்தின் பிடியில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கும் டெல்லியில் நம்முடைய விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய மக்கள் பாதை அமைப்பு உறுதுணையாக இருக்கும் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன். எனவே நாங்கள் தமிழர்களுக்காக களமாட போகிறோம் என்பது மட்டும் உண்மை. இந்த அவலங்களை எல்லாம் நாம் ஒருகாலும் கண்டுகொள்ளாமல் இருக்க போவதில்லை. எனவேதான் சொல்கிறேன் மக்கள் பாதை இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தங்களை தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் நேர்மை உடையவர்களாக நெஞ்சுரம் உடையவர்களாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் தவறுகளை எல்லாம் தட்டிகேட்கும் இளைஞர்களாக நம்முடைய மக்கள் பாதை இளைஞர்கள் இருக்க போகிறார்கள். எனவே இந்த நல்ல நேரத்தில் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் நம்முடைய உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது. உறுதியாக இருக்க வேண்டும். இன்றைக்கு நம்முடைய நாட்டில் வெறுப்பு அரசியல் வெற்றி பெறுகிறது என்று இங்கே பேசியவர்கள் தெரிவித்தார்கள். நமக்கு தற்போது தேவைப்படுவது வெறுப்பு அரசியல் அல்ல, நெருப்பு அரசியல் என்று அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

 

தமிழகத்தில் சூழ்ந்துள்ள வெறுப்பு அரசியலை தூக்கி எறிய நம்மைபோன்ற நெருப்பு அரசியல் செய்பவர்கள் வேண்டும். உளமாற அந்த நெருப்பு அரசியல் இளைஞர்களை நான் வாழ்த்துகிறேன். நம்முடை.ய அடையாளத்தின் மீது நமக்கு பெருமை இருக்ககூடும். எனக்கு கூட அந்த பெருமை உண்டு. இன்றைக்கு நான் விருப்ப ஓய்விலே வெளியே வந்திருக்கிறேன். கடந்த வரும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நான் பிரான்ஸ் தமிழ் சங்கம் நடத்தும் ஒரு விழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதினேன். ஏனென்றால் என்னை போன்ற அதிகாரிகள் வெளியே செல்ல வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். வழக்கமாக இந்த மாதிரி நேரத்தில் அரசு கால தாமதப்படுத்தும். அதை என்னுடைய கோரிக்கையின் போதும் செய்தார்கள். அவர்களுக்கு கடைசியாக ஒரு கடிதம் எழுதினேன்.

 

அதில், " இந்த ஐஏஎஸ் பதவி என்பது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவு பதவி, அதில் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்துவிடலாம் என்ற நோக்கத்தில்தான் சேர்ந்தேன். அதற்கு குறுக்கீடாக ஊழல் வந்து நின்ற போது, அதனை எதிர்த்து நெஞ்சுரத்தோடு நின்றேன். நான் ஊழலை எதிர்த்தது ஏன் தெரியுமா? அது ஏழை எளியவர்களுக்கு எதிரானது என்பதால்தான் அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதால் ஊழலை எதிர்க்கிறேன். எனவேதான் ஊழலை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். அதை போன்று என் தாய் மொழி மீது தீராக்காதல் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுவிட முடியாது. இந்த பதவி பெரிதா அல்லது மொழி பெரிதா என்றால் மொழி தான் பெரிது என்று கூறி, உங்கள் அனுமதியே வேண்டாம் என்று கூறி அந்த கடிதத்தை அவர்களுக்கு அனுப்பினேன்" என்றார். 

 

Next Story

'சகாயம் உடல்நிலை நன்றாக உள்ளது' - மருத்துவமனை தகவல்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

sagayam ias coronavirus positive chennai government hospital

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், வேட்பாளர்கள் சிலர் கரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் 'சகாயம் அரசியல் பேரவை' என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். இந்த அமைப்பு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும் சகாயம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சகாயத்திற்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து 8- வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

சகாயம் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் டீன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ். உடல்நிலை நன்றாக உள்ளது. மீண்டும் பரிசோதனை செய்து கரோனா இல்லை எனத் தெரியவந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

"தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை"- சகாயம் வேதனை!

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

sagayam ias pressmeet at chennai

 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் பாதை அமைப்பின் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், "புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் நம்பிக்கை இல்லாததே விவசாயிகள் போராட காரணம். தேர்தல் நேரத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை. நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு மக்கள் பிரதிநிதிகளை இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.